Saturday, June 28, 2008

கஸ்டமர் (வாடிக்கையாளர்)

கஸ்டமர் (வாடிக்கையாளர்) என்பவர் ஒருவருக்காகத்தான் நாம் இங்கு இருக்கிறோம், ஏன் என்றால் அவர் தான் நம்முடைய அனைத்து தோவைகளுக்கு உடையா ரசீது மற்றும் சம்பளம் போன்ற வற்றை தருகின்றர், மேலும் நம்மை வியாபரத்தில் நீடிக்க செய்கின்றார், அதனால் அவருடைய தேவைகளை நாம் புரிந்து கொள்வது மிக அவசியம் அப்போது தான் நாம் அவருடைய தேவைகளை மிகச்சரியா நிறைவேற்ற முடியும்.

சரி இப்போது கஸ்டமர் (வாடிக்கையாளர்) அவர்களுடைய தேவைகள் என்ன என்பதை பார்ப்போம்

1. நம்பகத்தக்க தன்மை, (Reliability) (அதாவது நாம் என்ன சொன்னோமே அதை செய்வது, முடிந்தால் அதிகம் செய்வது, அதே நேரத்தில் சொன்னதை விட குறைவாக செய்யாமல் இருப்பது)

2. வேகம் (Speed)(இந்த இனைய உலகில் வேகம் மிகவும் முக்கியம் அது தற்போது எப்படி என்றால் அது மாதத்திலா, வாரத்திலா, நாட்களிலா என்று கேட்டல் இல்லை உடனே கேட்டவுடன் பொருள் கையில் வேண்டும், இது நிருவனத்தின் போட்டித் தன்மையை மேன்படுத்த உதவும்)

3. அறிந்து கொள்ளுதல் (Empathy) (எல்லா வாடிக்கையாலரையும் ஒரே நேரத்தில் திருப்தி படுத்த முடியாது, அதே நேரத்தில் அவர்களுடைய வருத்தம், கோபம், ஏமாற்றம் அகியவற்றறை உனர்ந்து அவர்களிடம் நாம் புரிந்து கொண்டதை தெரிவித்துக்கொண்டு மேலும் இது போல் நடக்காமல் பார்த்த கொள்வதாக உறுதி கூறவேண்டும்)

4. அறிவுத்தன்மை ( Knowledge)(அறிவுத்தன்மை நாம் நிறுவனத்தின் மீது உள்ள மதிப்பை வாடிக்கையாளர் இடையே உயர்த்துகின்றது மேலும் அது பிரச்சனைகளுக்கு மிக விரைவாக விடைகாண உதவுகின்றது.)

5. பார்க்க மற்றும் உணரக்கூடியவைகள் (Tangibility) (வாடிக்கையாளர் பாக்ககூடிய மற்றும் தொடக்கூடிய யாவும் அது உங்கள் தொழிலாளி உடை மற்றும் அழகு தோற்றம், நிருவனத்தின் இடம், விளம்பரம்)

6. விலை (Value) (பொருள் விரைவாகவும், உழைக்ககூடியதாகவும், நம்பிக்கை உடையதாகவும், கிடைத்தாள் மக்கள் விலை அதிகம் தந்து பெற தவறுவதில்லை)

ஒவ்வொறு வாடிக்கையாளரின் தேவை மற்ற வாடிக்கையாளரின் தேவையை விட மாறுபட்டு இறுக்கும் அதாவது ஓருவருக்கு விலை முக்கியமானதாக இருக்கும் மற்றவருக்கு பொருள் விரைவாக கிடைக்க கூடியது முக்கியமானதாக இருக்கும் அகையால் நாம் நம்முடைய வாடிக்கையாளரின் தேவை அறிந்து அவர்களுக்கு எற்றார் போல அறிந்து செயல்பட்டல் வெற்றி நிச்சயம்

இன்னும் வளரவேண்டும்...

எனக்கு எல்லாம் இருக்கு; இதுக்கு மேல ஒண்ணும் தேவையில்லை. அப்புறம் நான் ஏன் அலட்டிக்கணும்?’’ என்று வாழ்வின் மிக உயரிய நிலையைத் தொட்டவர்களைப் போல சிலர் கேட்பது எனக்கு வியப்பைத் தருகிறது.

600 கோடி ரூபாய்க்கு வருட வர்த்தகம் செய்யும் ஒரு மிகப்பெரிய தமிழகத் தொழிலதிபரைக் கேட்டேன். ‘‘என்ன, மன நிறைவுதானே?’’ ‘‘நிச்சயம் நிறைவுதான். ஆனாலும் இதோடு திருப்தியடைந்துவிட முடியுமா? அடுத்த இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி நகர ஆரம்பித்தாயிற்று.’’

‘‘இன்னும் வளரவேண்டும்தான். ஆனால் இதற்கு எல்லைதான் என்ன?’’

‘‘ஒரு தொழிலில் திருப்தி அடைந்துவிடுவது என்பது தேக்கம் அடைவதற்குச் சமம். தேக்கம் வந்துவிட்டால் அது சரிவின் ஆரம்பம் என்பேன்.

தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. அம்பானி சகோதரர்களிடம் கேட்டுப்பாருங்களேன், திருப்திதானே என்று! இன்னும் வளர்ந்தால் எத்தனையோ பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளும், மறைமுக வேலை வாய்ப்புகளும் தர என் நிறுவனம் காரணமாக இருக்குமே!’’

இப்படி அவர் மண்டைப் போடாகப் போட்ட பிறகு ஆசைதான் துன்பங்களுக்குக் காரணம் என்கிற புத்தரின் போதனையையும், ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்கிற நம் சான்றோரின் வாக்கையும் வைத்து இவரை வாதத்தில் வென்றுவிட முடியும் என்கிற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது.

‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்கிற பாடல் வரிகள் 60களில் நன்கு எடுப்பட்டன. இன்று ‘உனக்கு மேலே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நீயூம் உயரு’ என்று புதுக் கவிதை பாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஒகேனக்கலில் பரிசல்காரர்கள் நீரோட்டத்தை எதிர்த்து திறமையாகப் பரிசலை நகர்த்துகிறார்கள். வேகமான நீரோட்டத்திற்கு எதிராக ஒரு கைத் துடுப்பு என்ன பெரிதாகச் செய்து விடமுடியும்?

ஆனாலும் மெல்ல, அழகாக முன்னேறுகிறார்கள். இலக்கில் சரியாகக் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். பிறகுதான் வியர்வையைத் துடைக்கிறார்கள். இப்படி நீரோட்டத்திற்கு எதிராகத் துடுப்புப் போடுவதை நிறுத்திவிட்டு சாவகாசமாக வியர்வையைத் துடைத்தால் நாம் எங்கே கொண்டு போய்த் தள்ளப்படுவோம் என்று சிந்தித்துப் பார்த்தேன்.

வாழ்விலும் இதேதான். போட்டிமயத்தில் எவ்வளவு முன்னதாகப் போனாலும் நூறாவது ஆளாக ஆகிவிடுகிற நாம், நம் போட்டி உணர்வையும் வளர்ச்சியில் காட்டும் தாகத்தையும் திருப்தியடைந்த நிலையில் ஒதுக்கிவைத்தால் நாம் எங்கே கொண்டுபோய் நிறுத்தப்படுவோம் என்று எண்ணிப் பாருங்கள்.

வளர்ச்சியில் தாகம் காட்டாத வரை இருக்கிற இடத்தைக் காப்பாற்றிக் கொள்வதே கடினமாகிவிடும். நாளும் படிப்படியான முன்னேற்றம். அல்லது அங்குல முன்னேற்ற மேனும். இதுதான் இந்த நிமிடத்திற்கு வேண்டிய முக்கியச் சிந்தனை.

நன்றி குமுதம்

பணவீக்கம் என்றால் என்ன? எதை வைத்து முடிவு செய்கிறார்கள்? எதனால் வருகிறது?

பணவீக்கம் என்றால் என்ன? எதை வைத்து முடிவு செய்கிறார்கள்? எதனால் வருகிறது?

``காற்று ஊத ஊத, பலூன் வீக்கம் அடைகிற மாதிரி, விலைகள் வீங்குவதுதான் பணவீக்கம். இன்பிளேஷன்.

முன்பு 100 ரூபாய் கொடுத்து வாங்கிய பொருட்களின் விலை 105 ஆகிவிட்டால், பணவீக்கம் ஐந்து சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதே பொருட்களை வாங்குவதற்கு 109 ரூபாய் தேவைப்பட்டால், பணவீக்கம் ஒன்பது சதவிகிதம்.

மாதம் ரூ.3000 செலவு செய்யும் குடும்பத்திற்கு பணவீக்கம் 9% ஆனால், செலவிற்கு ரூ.3270 அதாவது ரூ.270 கூடுதலாக தேவைப்படும். இல்லாதவர்கள் எப்படிச் சமாளிப்பது என்கிறீர்களா? இரண்டே வழிகள்தான். ஒன்று, வாங்கும் அளவைக் குறைத்துக்கொள்வது (அடிக்க வராதீர்கள்). அல்லது கடன் வாங்குவது ( இதற்கு அதுவே மேலோ!).

தற்சமயம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவாக 8
சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறது பணவீக்கம். நம் நாட்டில்தான் என்றில்லை. இப்போது உலகெங்கிலுமே விலைவாசி உயர்வுதான் பெரிய பிரச்னை. சீனா 8.7%, ரஷ்யா 12 % க்கும் மேல், சவுதி அரேபியா 9.8%, ஹாங்காங், சிங்கப்பூர் எல்லாம் 6% க்கும் மேல். இவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவதுபோல, வியட்நாமின் பணவீக்கம் 25%.

நன்றி குமுதம்