Saturday, October 02, 2010

இலட்சிய சிகரம்

இன்று காலை சன் டிவியில் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாசித்த கவிதை

இலட்சிய சிகரம்

நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்,

எங்கு இருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா?

நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,

எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா?

நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே  இருக்கிறேன்,

எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என்   இறைவா?

இறைவா, நூறு கோடி மக்கள்

இலட்சிய சிகரத்தையும், அறிவுப்  புதையலையும்,

இன்ப அமைதியையும், உழைத்தடைய அருள்வாயாக.

No comments: