Thursday, August 31, 2006

ஹா..! ஹா..!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தின் நிமித்தம் உலக நாடுகளில் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பிய நேரம்.

பல்வேறு பத்திரிக்கைகளின் செய்தியாளர்கள் உடனே அவருடைய ராமாவரம் தோட்டத்திற்குப் படை எடுத்தனர்.

“உலக நாடுகள் சிலவற்றிற்குத் தாங்கள் போய்த் திரும்பியிருக்கிறீர்கள். ரொம்பவும் மகிழ்ச்சி. குறிப்பாக, ஜப்பான் நாட்டிலே தங்களுக்கு எது பிடித்தது என்று சொல்ல முடியுமா?” என்று நிருபர் ஒருவர் கேட்டார்.

"ஜப்பான் நாட்டில் எனக்கு சதைப் பிடித்தது!” என்றார் புரட்சி திலகம்.

அவ்வளவு தான்! அங்கே அப்போது எழுந்த சிரிப்பொலி அடங்க சில நிமிஷங்கள் பிடித்தன!

சுவையான மனிதர்கள்
சுவையான சம்பவங்கள்.

Wednesday, August 30, 2006

கவிதையே தெரியுமா…!




படித்ததில் ரசித்தது..,

"தண்டவாளத்தில் தலைசாய்த்துப் பூத்திருக்கும் ஒற்றைப் பூ என் காதல் நீ நடந்து வருகிறாயா ரயிலில் வருகிறாயா"

(பழனி பாரதி)

Tuesday, August 29, 2006

பூ பூப்பது நமக்காக!

வாத நோய் போக்கும் தாழம்பூ,
ஆறாத புண்களுக்கும் தீராத தலைவலிக்கும் ஆறுதலளிக்கும் சம்பங்கி,
சொறி சிரங்கு வீக்கங்களைப் போக்கும் மல்லிகை,
வயிற்றுக் கடுப்புக்கு மருந்தாக அமையும் மாதுளம் பூ,
பாம்புக் கடியின் துயர் போக்கும் தும்பைப் பூ,
வயிற்றுப் பூச்சிகளை விரட்டியடிக்கும் வேப்பம்பூ,
உறுப்புகளுக்கு உறுதியளிக்கும் செம்பருத்தி,
தூக்கத்திற்கு துணையளிக்கும் மருதோன்றிப் பூ,
நோய்களுக்கெல்லாம் காரணமான மூல நோயைப் போக்கும் வாழைப்பூ,
சூட்டைத் தணித்து கண் எரிச்சலை நீக்கும் முருங்கைப் பூ,
நீரழிவு உடல் நாற்றம் நீக்கும் ஆவாரம்,
கருவுற்ற பெண்களின் கவலையைப் போக்கும் குங்குமம்!
(நன்றி: மிக்க மேலானவன்)

இங்கு குறிப்பிட்டு உள்ளது சில பூக்கள் மட்டுமே இதுபோன்று நூற்றுக்கணக்கான மலர்கள் நமக்கு பல்வேறு பயன்களைத் தருகின்றன.

Monday, August 28, 2006

அறிவின் அடிப்படையில் மனிதர்கள்...

அறிவின் அடிப்படையில் மனிதர்களை ஆய்ந்துள்ளார் அரபு நாட்டு மேதை கலீல் இப்னு அஹ்மது என்பார்.

முதலாவது: தான் அறிந்தவன் என்பதை அறிந்திருக்கும் அறிஞன்: அவனைப் பின் பற்று.

இரண்டாவது: தான் அறியாதவன் என்பதை அறியாதிருப்போன்: அவன் தூங்குகிறான் அவனைத் தட்டி எழுப்பு.

மூன்றாவது: தான் அறியாமலிருப்பதை அறிந்திருப்பவன்: அவன் பாமரன் அவனுக்கு கற்றுக் கொடு.

நான்காவது: தான் அறியாதவன் என்பதை அறியாதிருப்பவன்: அவன் முட்டாள் அவனை ஒதுக்கித் தள்ளு.

இதனைத் தமது அரிய நூலில் எடுத்துக்காட்டியுள்ளார் அறிவுக் கடல் இமாம் கஸ்ஸாலீ {ரஹ்} அவர்கள்.

Sunday, August 27, 2006

புள்ளி விபரம்தான்.

ஜோஸப் ஸ்டாலின் ஆயுதக் கிடங்கு அதிகாரியாயிருந்தபோது அவர் உயர்ந்த அதிகாரிகளைக் கொண்டு ஓரு கூட்டம் கூட்டினார் அதில் அவர்கள் உக்ரைனில் எற்பட்டிருந்த பஞ்சம் பற்றி விவாதித்தார்கள்.

ஓர் அதிகாரி எழுந்து நின்று அங்கு நிலவும் பஞ்சத் துயரை உணர்ச்சியுடன் விளக்கத் துவங்கினார். " நூறாயிரக்கணக்கான மக்கள் பூச்சி, புழுக்களைப் போல செத்து மடிகின்றார்கள்" என்று கூறி விட்டு அவர், ஓவ்வொரு பகுதியிலும் இறந்தவர்கள் தொகையை வாசிக்க ஆரம்பித்தார். உடனே ஸ்டாலின், "ஓரு மனிதன் இறந்தால் அது பரிதாபத்துக்குறிய விஷயம், நூறாயிரக்கணக்கானவர் இறந்தால் அது வெறும் புள்ளி விபரம்தான்" என்றார்.

படியுங்கள் சுவையுங்கள் - அப்துற்-றஹீம்

ஓரு நிமிடம்...

அப்பா தனது பிள்ளைக்குக் கொடுக்கிற "பாக்ககெட் மணி" மாதிரி ஆண்டவன் நமது கையில் நேரத்தை கொடுத்திருக்கிறார்.

அதை நம்மில் எத்தனை பேர் எண்ணிப் பார்க்கிறோம்?

ஓன்று மட்டும் உண்மை. நேரம் பணத்தைவிட உயர்ந்தது. ஏனென்றால் அந்தப் பணத்தையே அதுதான் சம்பாதித்துத் தருகின்றது.

இன்னும் ஓரு நிமிடம் லேட்டாகியிருந்தா காப்பாத்தியிருக்க முடியாது அல்லது காப்பாத்தியிருக்க முடியும் என்று டாக்டர் சொல்வார் இதுபோன்று பலமுறை நாம் பார்த்திருப்போம், கேட்டு இருப்போம் அதுபோல வாழ்வில் ஓவ்வெரு நிமிடமும் அருமையானது. இதை சிந்தித்தால் வெற்றி நிச்சயம்.

Saturday, August 26, 2006

எளிய முறையில் நேர நிர்வாகம் பகுதி : 1


powered by ODEO

இது எனது முதல் ஒலிப்பதிவு கேளுங்க கேளுங்க கேட்டுபுட்டு உங்க கருத்ததை பதியுங்க நன்றி!

MP3 டவுன்லோடு செய்ய இங்கே அழுத்தவும்

Friday, August 25, 2006

இணைப்பு...

இணைய உலகில் வலம் வரும் போது ஒர் கட்டுரை படித்ததேன் அதில் என்னை கவர்ந்த இணைப்பு (Networking) பற்றி விசயம் பயன் உள்ளதக தோன்றியது இதே இங்கே அவைகள்.

இன்று பல புதிய திறமை வாய்ந்த இளையர்கள் தங்களிடையே இனணப்பை எற்படுத்த தயங்குகின்றார்கள் அல்லது தயாரக இல்லை என்று கூறலாம் ஏன் என்றால் ஒருவருடன் இணைப்பை எற்படுத்துவது என்பது புதிய வேலை கிடைக்க உதவும் என்று மட்டும் நினைக்கிறார்கள் மற்ற பயன்னுள்ள விசயங்களை பார்ப்பதும் இல்லை எடுத்துகாட்டக ஒருவருடன் இணைப்பை அல்லது இணையதளங்களில் மூலம் மின்அஞ்சல் பெறுவது போன்றவை நாம் தொழில் துறையில் எற்படும் மாற்றம், துறையின் எதிhகலாதிட்டம், துறையில் நிலவும் போட்டித்தன்மை, பல்வேறு புதிய வியாபர வாய்ப்புகள், புதிய சிந்தனை, புதிய செயல் ஆக்கம் போன்ற பலவகையான பயன்கள் உண்டு என்பதை பல சமங்களில் அறிய மறுக்கின்றோம். சரிதானே. மாற்று கருத்து இருந்தல் தயவு செய்து தெரிவியுங்கள்.

மேல் கூறியவற்றை பற்றி மேலும் ஆங்கிலத்தில் அறிய Seven Career Killers – (Kiplinger’s Personal Finance)

Thursday, August 24, 2006

அடுத்தவர் பிரச்சனையை...

"அடுத்தவர் பிரச்சனையை சரிசெய்யதீர்கள்" என்னடா இப்படி சொல்றான் பார்க்கதீங்க மேலோட்டமா பார்த்தா அப்படித்தான் தெரியும் இன்னும் படிங்க! நீங்க தொடர்ந்து அடுத்தவர் பிரச்சனையை சரிசெய்து கொண்டு இருந்திங்கன்ன அவருடைய அடுத்த பிரச்சனை உங்களுடையதா தான் இருக்கும் அதனால் நீங்கள் அடுத்தவர் பிரச்சனையை சரிசெய்வதை விட அவருக்கு எப்படி பிரச்சனையை தீர்ப்பது அல்லது கையாலுவது என்பதை கற்று தன்தாள் அவருக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது எப்படி!!! நான் சொல்வது சரி தானே?

பழமொழி :
பசித்தவனுக்கு மீன் கொடுப்பதைவிட, மீன் பிடிக்க சொல்லிக்கொடுப்பது நன்று.

தலைவலியை குறைக்க சில வழிவகைகள்!

தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பது பழமொழி

கீழ் தரப்பட்டுள்ள சில வழிவகைகள் உங்கள் தலைவலியை போக்க உதவும்
1. வாழைப்பழம் சப்பிடுவதன் மூலம்
2. பெப்பர்மெண்ட் சப்பிடுவதன் மூலம் (பெப்பர்மெண்ட்டுக்கு தமிழில் என்ன என்று தெரியவில்லை தெரிந்தால் கூறாவும்)
3. தக்காளி சார் பருகுவதன் மூலம்
4. கோபின் இல்லாத கோலா பருகுவதன் மூலம்
5. ரொட்டி துன்டு அல்லது நல்ல சாப்படு சப்பிடுவதன் மூலம்
மேலே கூறியவை மூலம் உங்கள் தலைவலியை குறைக்க முடியும் மேலும் உங்களுக்கு பலவழிகள் தெரிந்து இருக்களாம் தெரிந்தால் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்

Wednesday, August 23, 2006

முதலாளி

வியாபரத்தில் ஒரே ஒருவர் மட்டுமே முதலாளி: அவர் தான் கஸ்டமர்,

அவர் நினைத்தால் நிறுவனத்தில் உள்ள யாரை வேண்டும் என்றாலும் நீக்க முடியும் அது முதலாளி முதல் தொழிலாளி வரை, பணத்தை மற்ற இடங்களில் செலவு செய்வதின் மூலம்

சாம் வால்டன், நிறுவனர் வால் மார்ட்

There is only one boss: the customer.

And he can fire everybody in the company, from the chairman on down, simply by spending his money somewhere else.
SAM WALTON, FOUNDER OF WAL-MART

ஏன்! ஏதற்கு! ஏதை!

சும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த இணையதளம்