Thursday, August 31, 2006

ஹா..! ஹா..!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தின் நிமித்தம் உலக நாடுகளில் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பிய நேரம்.

பல்வேறு பத்திரிக்கைகளின் செய்தியாளர்கள் உடனே அவருடைய ராமாவரம் தோட்டத்திற்குப் படை எடுத்தனர்.

“உலக நாடுகள் சிலவற்றிற்குத் தாங்கள் போய்த் திரும்பியிருக்கிறீர்கள். ரொம்பவும் மகிழ்ச்சி. குறிப்பாக, ஜப்பான் நாட்டிலே தங்களுக்கு எது பிடித்தது என்று சொல்ல முடியுமா?” என்று நிருபர் ஒருவர் கேட்டார்.

"ஜப்பான் நாட்டில் எனக்கு சதைப் பிடித்தது!” என்றார் புரட்சி திலகம்.

அவ்வளவு தான்! அங்கே அப்போது எழுந்த சிரிப்பொலி அடங்க சில நிமிஷங்கள் பிடித்தன!

சுவையான மனிதர்கள்
சுவையான சம்பவங்கள்.

1 comment:

கார்த்திக் பிரபு said...

nnall iruke ..adhu sari nan indru than ungali parkirane..sadhai nu enna rthathil emjiyar sonnar