Monday, August 28, 2006

அறிவின் அடிப்படையில் மனிதர்கள்...

அறிவின் அடிப்படையில் மனிதர்களை ஆய்ந்துள்ளார் அரபு நாட்டு மேதை கலீல் இப்னு அஹ்மது என்பார்.

முதலாவது: தான் அறிந்தவன் என்பதை அறிந்திருக்கும் அறிஞன்: அவனைப் பின் பற்று.

இரண்டாவது: தான் அறியாதவன் என்பதை அறியாதிருப்போன்: அவன் தூங்குகிறான் அவனைத் தட்டி எழுப்பு.

மூன்றாவது: தான் அறியாமலிருப்பதை அறிந்திருப்பவன்: அவன் பாமரன் அவனுக்கு கற்றுக் கொடு.

நான்காவது: தான் அறியாதவன் என்பதை அறியாதிருப்பவன்: அவன் முட்டாள் அவனை ஒதுக்கித் தள்ளு.

இதனைத் தமது அரிய நூலில் எடுத்துக்காட்டியுள்ளார் அறிவுக் கடல் இமாம் கஸ்ஸாலீ {ரஹ்} அவர்கள்.

No comments: