Tuesday, August 29, 2006

பூ பூப்பது நமக்காக!

வாத நோய் போக்கும் தாழம்பூ,
ஆறாத புண்களுக்கும் தீராத தலைவலிக்கும் ஆறுதலளிக்கும் சம்பங்கி,
சொறி சிரங்கு வீக்கங்களைப் போக்கும் மல்லிகை,
வயிற்றுக் கடுப்புக்கு மருந்தாக அமையும் மாதுளம் பூ,
பாம்புக் கடியின் துயர் போக்கும் தும்பைப் பூ,
வயிற்றுப் பூச்சிகளை விரட்டியடிக்கும் வேப்பம்பூ,
உறுப்புகளுக்கு உறுதியளிக்கும் செம்பருத்தி,
தூக்கத்திற்கு துணையளிக்கும் மருதோன்றிப் பூ,
நோய்களுக்கெல்லாம் காரணமான மூல நோயைப் போக்கும் வாழைப்பூ,
சூட்டைத் தணித்து கண் எரிச்சலை நீக்கும் முருங்கைப் பூ,
நீரழிவு உடல் நாற்றம் நீக்கும் ஆவாரம்,
கருவுற்ற பெண்களின் கவலையைப் போக்கும் குங்குமம்!
(நன்றி: மிக்க மேலானவன்)

இங்கு குறிப்பிட்டு உள்ளது சில பூக்கள் மட்டுமே இதுபோன்று நூற்றுக்கணக்கான மலர்கள் நமக்கு பல்வேறு பயன்களைத் தருகின்றன.

No comments: