Tuesday, October 28, 2008

NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது?

NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்.

  1. NHM Writer மென்பொருள்  Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது.
  2. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது.
  3. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது.
  4. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும்.
  5. தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள்  மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.
  6. ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி.
  7. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும்.
  8. இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை.

NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி?

NHM Writer என்ற மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.

எவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.

Click here to download NHM Writer

image

உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும்.

பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

2ஆம் படி (Step 2)  இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image 

3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
image

4ஆம் படி (Step 4)  இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

image

6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்

image

பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.

image

NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது?

NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற image ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம்.  இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும். 

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது?

நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon)  உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.

image

தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.

மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.

செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது?

NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.

image

தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது?

முதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது? என்பதை அறிவது அவசியம்.

ஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும். 

image

நீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.

யா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது?

எனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது. 

Key Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.

image

அதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்

image

உதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை ”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் "a;" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.

image

நீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.

இனி உங்கள் தமிழ் தட்டச்சு, தமிழை போலவே இனிதாக இருக்கும்! வளர்க இனிய தமிழ் மற்றும் இணைய தமிழ்!!!  

Friday, October 24, 2008

ICICI Direct மூலம் எவ்வாறு தின வர்த்தகம் செய்வது?

எல்லோரும் தினசரி வர்த்தகம் செய்கின்றார்களே., நாமும் செய்வோம்னு களத்துல இறங்கினேன். முதலில் நமக்கு தின வர்த்தகம் செய்யவதற்கு நல்ல பங்கு எது என்று தெரியவேண்டும் அல்லவா! அதனால் நம்ம (பங்கு சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க) ”திரு. சாய் கணேஷ்” அவர்களின் ”நிப்டி” போட்டியில் கலந்துகொண்டேன்.

”நிப்டி முடிவு என்ன?” என்ற போட்டியில் ஒருநாள் வெற்றி பெற்றதால் ஒரு மாதத்திற்கான தினவர்த்தக குறிப்பு பரிசாக கிடைத்தது.

அதன்படி திரு.சாய் அவர்களும் தினசரி தினவர்த்தக குறிப்பு அனுப்புகிறார் நானும் பார்க்கின்றேன். அவர் பரிந்துரை செய்த பங்குகள் சொன்ன மாதிரி ஏறி இறங்கியது. ஆக என்னடா கையில் வெண்ணைய வச்சிகிட்டு நாம சும்மா பார்த்துக்கிட்டு இருக்கோமேன்னு களத்துல  இறங்கிட்டேன். (ஒரு நாள் மட்டும்)

எப்படி Margin Plus அல்லது Margin வர்த்தகம் செய்வது?

நீங்கள் ICICI Direct வங்கியில் கணக்கு வைத்து இருந்தால், இரண்டு விதமான முறையில் தினவர்த்தகம் செய்ய முடியும்.

1. Margin Plus இதில் உங்கள் கையில் இருக்கும் முதலீட்டை விட 21 மடங்கு அதிகமான  பங்குகளை வாங்கி விற்க முடியும்.

2. Margin இதில் உங்கள் கையில் இருக்கும் முதலீட்டை விட 3 முதல் 4 மடங்கு அதிகமான  பங்குகளை வாங்கி விற்க முடியும்.

Margin Plus மற்றும் Margin னில் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், MarginPlus ல் டெலிவரி எடுக்க முடியாது. உங்களிடம் தேவையான பணம் இருப்பில் இருந்தால் மட்டுமே Margin னில் டெலிவரி எடுக்க முடியும்.

image

Margin Plus வர்த்தகம் செய்ய முதலில் Margin Plus order என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் கீழ் தெரியும் திரையில் நீங்கள் வாங்க நினைக்கும் பங்கு குறியீட்டு எண்னை குறிப்பிட்டு பின்னர் எத்தனை வாங்க அல்லது விற்க விரும்புகின்றீர்கள் என்று தெரிவிக்கவேண்டும்.

image 

உதாரணமாக எப்படி முதலில் விற்றுவிட்டு பின்பு வாங்குவது என்பதை பார்ப்போம்.

முதலில் Action என்ற இடத்தில் Sell  என்பதை நீங்கள் செலக்ட் செய்ய வேண்டும்.

image 

உதாரணமாக நீங்கள் Reliance Infra பங்கை வாங்க எண்ணி இருந்தால் பங்கினுடைய Stock Code என்ன என்பதை Stcok என்ற இடத்தில் தரவேண்டும்.

குறிப்பு : ICICI Direct வுடைய Stock code, NSE உள்ள Stock code இரண்டும் ஒன்று அல்ல. ஆகவே உங்களுக்கு Stock code என்னவென்று தெரியாவிட்டால் Find Stock code என்ற லிங்கை கிளிக் செய்து நிறுவனத்தின் பெயர் குறிப்பிட்டு Search செய்யவும்.

Stock Code கிடைத்தவுடன் தற்போது உள்ள விலை நிலவரம் தெரியவேண்டும் என்றால் Get Quote என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

நீங்கள் விற்க நினைக்கும் அளவு (Qty) என்ன என்பதை Quantity என்ற இடத்தில் தரவும்.

பின்னர் Cover Order பகுதியில் முக்கியமாக, என்ன விலைக்கு வாங்க அல்லது விற்க விரும்புகின்றீர்கள் என்பதை Limit Price என்ற இடத்தில் தரவும். பின்னர் Stop Loss Trigger Price எவ்வளவு என்பதையும் தெரிவிக்கவேண்டும். குறிப்பாக Stop Loss Trigger Price 3% சதவிகிதம் Limit Price விலைக்கு குறைவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் Submit செய்யும் போது Error என்று வரும் மீண்டும் சரி செய்து தான் Submit செய்யமுடியும்.

குறிப்பு : ICICI Direct அக்கவுன்டை பொருத்தவரை உங்ளுடைய Stop Loss Trigger Price தொட்டவுடன் உங்களுடைய Order உறுதி செய்யப்படும். ஆகவே முடிந்த வரை Stop Loss Trigger Price யை தற்போதைய விலைக்கு சற்று தள்ளியே தரவும்.

மேற்கூறிய விபரங்கள் அனைத்தும் தந்து Submit பட்டனை அமுக்கினால் கீழ் உள்ள திரை கணினியில் தெரியும்.

image 

நீங்க தந்த விபரம் மீண்டும் ஒரு முறை சரிபார்க்கவும். (தயவு செய்து என்ன விலைக்கு விற்பனை செய்கின்றோம், என்ன விலைக்கு வாங்குகின்றோம் என்பதை கட்டயாம் பார்க்கவும்.) சரிபார்த்த பின்பு Proceed என்ற பட்டனை அமுக்கவும்.

image 

Proceed என்ற பட்டனை அமுக்கியவுடன் மேலே உள்ள Order Confirmation திரை தெரியும்.

நம்முடைய Order நிலை என்ன என்பதை பார்க்க Margin Plus Positions என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

image

உங்களுடைய Order நிலை கீழ் உள்ள திரை விளக்கப்படத்தில் உள்ளது போல் தெரியும். image

சரி, தற்போது உங்கள் கையில் பங்கு இல்லாமல் விற்பனை செய்து முடித்து விட்டீர்கள். அதுபோல் என்ன விலைக்கு வாங்கவேண்டும் என்பதையும் Order செய்து செய்துவிட்டீர்கள். எல்லாம் சரி தான்., நான் முன்பு கூறியது போல் நீங்கள் என்ன விலைக்கு விற்பனை செய்கின்றோம், என்ன விலைக்கு வாங்குகின்றோம் என்று பார்த்து இருந்தால் உங்களுக்கு சந்தேகம் வந்து இருக்கும். வரவில்லையா?! இல்லையென்றால்.,  மேலே உள்ள திரை விளக்கப்படத்தை உற்று நோக்குங்கள்! நான் என்ன சொல்ல வருகின்றேன் என்று புரியும். 

இன்னும் புரியவில்லையா?! சொல்கிறேன், கவனமாக படியுங்கள். அதாவது நீங்கள் Reliance Infra பங்கை விற்ற விலை 521.55 ரூபாய். ஆனால் நீங்கள் வாங்க சொல்லி இருக்கும் விலை 550. Stop Loss விலை 530 ரூபாய்.  அப்படியென்றால்

Sell @ 521.55X20 =  10431 ரூபாய்

Buy @ 550.00X20 =  11000 ரூபாய்.

முதலில் நீங்கள் விற்று விட்டு வாங்குவதால் உங்களுக்கு =  569 ரூபாய் தான் நஷ்டம். 

இது ICICI Direct டில் உள்ள ஒரு குறைபாடு. இதுபோன்ற நிலைகளில் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால், எப்போது நீங்கள் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்கின்றீர்ளோ அப்போது Modify என்ற அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். (திரைவிளக்கப்படம் கீழே) 

image

Modify என்ற அந்த லிங்கை கிளிக் செய்த உடன் கீழே உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் கணினியில் தெரியும். அதில் நீங்கள் Order Type என்ற இடத்தில் Limit என்று இருக்கும் அதை நீங்கள் Market என்று மாற்றி Order Now என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

image

இவ்வாறு செய்தால் உங்களுடைய மாற்றம் செய்த Order அப்போதைய சந்தை விலையில் உங்களின் பங்குகள் வாங்கப்படும். இதன் மூலம் நீங்கள் முதலில் விற்று பின்பு வாங்கியதால் உங்கள் கணக்கு நேர் செய்யபட்டுள்ளது.

குறிப்பு : நீங்கள் உங்களுடைய Order  விபரம் மாற்ற விரும்பினால் மாலை 2:45 PM க்குள் முடித்து விடவேண்டும் இல்லையென்றால் 2:45 PM to 3:15 க்குள் எந்த நேரத்திலும் ஆட்டேமெட்டிக்காக ICICI Direct விற்று/வாங்கி உங்கள் கணக்கை நேர்செய்யும்.

உங்களுடைய லாபம்/நஷ்டத்துடன் பங்கு வணிகரின் தரகர் கட்டணம் எவ்வளவு என்பதையும் சேர்த்துகொள்ள வேண்டும்.  ICICI Direct டை பொறுத்தவரை கட்டணம் 0.05% சதவிகிதம்.

கடைசியாக, தினவர்த்தகத்தில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது ”ஸ்டாப் லாஸ்”. இரண்டாவதாக,  ”ஒரு லாட்” (lot) மட்டும் வாங்கவும், மூன்றாவதாக, ”டார்கெட்” -முற்றிலும் டெக்னிகல்அடிப்படையாக கொண்டது. அதனால் அதையே எதிர்பார்த்து இருக்க வேண்டாம், அதற்கு முன்பாகவே வெளியேறுங்கள்.

சந்தையில் வெற்றி பெற வேண்டும் என்றால், போதும் என்ற மனம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதிகம் ஆசைப்படாமல் லாபம் கிடைத்தவுடன் வெளியேறுங்கள். பட்டால் தான் திருந்துவேன் என்று இருக்காதீர்கள்.

இந்த பதிவை எழுத நான் ICICI Direct டுக்கு தந்த டியூசன் பீஸ் 1581.30 ரூபாய். (அன்றைய தேதியில் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம்)

இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

தினவர்த்தகம் எவ்வாறு செய்வது என்று கூறிய திரு. சாய் கணேஷ் நன்றி.

Monday, October 20, 2008

ஹவ் டு யூஸ் வின்டோஸ் லைவ் ரைட்டர் (How to use Windows Live Writer)

வின்டோஸ் லைவ் ரைட்டர் பயன் என்ன?

நீங்கள் வின்டோஸ் லைவ் ரைட்டர் மென்பொருள் வைத்து நேரடியா உங்கள் வலைபக்கத்தில் பதிவு செய்ய முடியும்.

பொதுவாக நீங்கள் பதிவு செய்ய உங்கள் வலைத்தளம் சென்று லாங்இன் செய்த பின்பு தான், பதிவு செய்ய முடியும்.

ஆனால் நீங்கள் இந்த வின்டோஸ் லைவ் ரைட்டர் மென்பொருள் வைத்து இருந்தால் (தமிழில் தட்டச்சு செய்ய நீங்கள் NHMWriter என்ற இந்த மென்பொருள் இன்ஸ்டால் செய்யவேண்டும்) தமிழில் அழகான முறையில் டைப் செய்து Publish என்ற பட்டனை தட்டினால் போதும் பதிவு உங்கள் வலைபக்கத்தில்.

இன்ஸ்டால் செய்யும் முறை.

வின்டோஸ் லைவ் ரைட்டர் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது.

மிக முக்கியமான கேள்வி மென்பொருளுக்கு கட்டணம் உண்டா? என்று கேட்டால் இல்லை.  தற்போது இலவசமாக மைக்ரோசாப்ட் இணையதளத்தில் இருந்து இறக்கிகொள்ள முடியும். முகவரி கீழ் தரப்பட்டுள்ளது

Download Windows Live Writer (Version 2008)

எவ்வாறு பயன்படுத்துவது

வின்டோஸ் லைவ் ரைட்டரில் எவ்வாறு நமது அக்கவுன்ட்ஸ் செட்டப் செய்வது?

மெனுபாரில் உள்ள டூல்ஸ் என்ற மெனுவை கிளிக் செய்து, அக்கவுன்ட்ஸ் என்ற மெனுவை கிளிக் செய்யவும்.

திரை விளக்கப்படம்.

image

புதிய அக்கவுன்ட்ஸ் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுன்ட்களை எவ்வாறு வைத்து கொள்வது?

புதிய அக்கவுன்ட்ஸ் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுன்ட்களை உருவாக்க (Add) ஆட் என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் அக்கவுன்ட்ஸ்  (Username, Password and Blog URL) விபரங்களை  தரவும். பின்பு சேவ் (Save) செய்யவும்.

திரை விளக்கப்படம்.

image

பதிவுகளை எவ்வாறு வகைப்படுத்துவது?

நாம் நமது பதிவுகளை வகைப்படுத்துவது உண்டு (Categories or Label). அதை இங்கு ஏற்படுத்தும் முறையை அறிந்து கொள்வோம்.

உங்கள்  வின்டோஸ் லைவ் ரைட்டரில் ஆக கீழ் பக்கத்தில் உள்ள சிறிய பார் ஒன்று தெரியும். அதில் (Set Categories) என்று குறிப்பிட்டு இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்கள் வலைப்பக்கத்தில் உள்ள வகைகள் (Categories) தெரியும். நீங்கள் வகைபடுத்த வேண்டிய தலைப்பை தேர்வு செய்யலாம் அல்லது புதிய தலைப்பை சேர்க்கவும் செய்யலாம்.

திரை விளக்கப்படம்.

image

நம்மில் பலர் வாரஇறுதி நாட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் இடுவது போன்ற வழக்கம் உடையவர்கள் இருப்போம். அல்லது தட்டச்சு செய்து MS-Word  டாக்குமென்டாக சேகரித்து வைத்து, பின்பு பதிவு இடுவோம்.

நீங்கள் இதை வின்டோஸ் லைவ் ரைட்டர் பயன்படுத்தி வாரஇறுதி நாட்களில் எழுதியதை வார நாட்களில் பதிவு செய்ய  விரும்பினால், நீங்கள் பதிவு செய்ய விரும்பும் தேதியை குறிப்பிட்டு பதிவு (Publish) செய்து விடுங்கள். அது சரியாக நீங்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் வலைதளத்தில் பதிவு செய்து விடும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது  எல்லாம் வின்டோஸ் லைவ் ரைட்டரில் ஆக கீழ் பக்கத்தில் உள்ள சிறிய பார் ஒன்று தெரியும். அதில் தேதி மற்றும் நேரம் இருக்கும். அதை கிளிக்செய்து தங்களுக்கு தேவையான தேதியை குறிப்பிட்டு பதிவு (Publish) செய்து விடவும்.

திரை விளக்கப்படம்.

image

நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வளைத்தளங்கள் வைத்து இருக்கும் பட்சத்தில், முதலில் எந்த வளைத்தளத்தில் பதிவு இட வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.  அதைச்செய்ய நீங்கள் வின்டோஸ் லைவ் ரைட்டர் மெனுவில் weblog என்ற வார்த்தையை கிளிக் செய்தால் அதில் தங்கள் இணையத்தளங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் நீங்கள் வெளியிட விரும்பும் வலைத்தளம் பெயரை கிளிக் செய்து, பின்பு செய்தியை தட்டச்சு செய்யவும்.

திரை விளக்கப்படம்.

image

நீங்கள் தட்டச்சு செய்த பதிவுகளை பதிவு (Publish)செய்ய Publish என்ற பொத்தானை அமுக்கினால் போதும் உங்கள் வளைத்தளத்தில் பதிவு ஆகிவிடும்.

திரை விளக்கப்படம். 

image

நீங்கள் புதிதாக பதிவு செய்ய  New என்ற பட்டனை அமுக்கினால் போதும். புதிய பதிவுக்கான பக்கம் உங்கள் முன்னால் தெரியும்.

நீங்கள் தட்டச்சு செய்தவற்றை பாதியில் சேகரித்து வைக்க Save Draft என்ற பொத்தானை அமுக்கினால் போதும். அது நமது கணினியில் பதிவு ஆகிவிடும்.

நம்முடைய வளைப்பதிவில் படங்கள், இணைப்புகள் மற்றும் வீடியோ பதிவுகள் இணைக்க கீழ் தரப்பட்டுள்ள மெனு மிக உதவியாக இருக்கும்.

திரை விளக்கப்படம்.

image

என்னை பொருத்தவரை இந்த மென்பொருள், வளைத்தளங்களில் பதிவு இடுவதை மிக எளிதாகவும் இளகுவாகவும் ஆக்கியிருக்கிறது என்று கூறினால் அது மிகையாகது. அதை நாம் சரியான விதத்தில் பயன்படுத்தி பெருமைக் கொள்வோம்.

Friday, October 17, 2008

கைத்தொலைப்பேசி ஆப்ரேட்டிங் சிஸ்டம்



இதுவரை கைத்தொலைப்பேசியில் ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்று சொல்லக்கூடிய மென்பொருள் பல விதமாக வந்து உள்ளது நாம் கைதொலைப்பேசி வாங்கும் போது என் மாதிரியான ஆப்ரேட்டிங் சிஸ்டம் அதில் உள்ளது அதனால் நமக்கு என்ன பயன் என்று பார்த்துதான் வாங்குகின்றோமா?

நீங்கள் வைத்துஉள்ள கைத்தொலைப்பேசியில் உள்ள ஆப்ரேட்டிங் சிஸ்டம் (Windows Mobile, iPhone, Android, Symbian, BlackBerry, and Palm)என்ன என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி என்றால் ஏன் வாங்கி இருக்கின்றீர்கள்? என்று பின்னூடம் இடவும்.

தற்போது Google கூட தன் பங்குக்கு Android என்ற புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்துடன் கைதொலைப்பேசி வெளியிட்டு உள்ளார்கள் 

Thursday, October 16, 2008

வின்டோஸ் லைவ் ரைட்டர்

நீங்கள் வின்டோஸ் லைவ் ரைட்டர் மென்பொருள் வைத்து நேரடியா பதிவு இடமுடியும்.

தற்போது நீங்கள் பதிவு இட உங்கள் வலைத்தளம் சென்று லாங்இன் செய்து பின்பு தான் பதிவு இடமுடியும் நீங்கள் இந்த வின்டோஸ் லைவ் ரைட்டர் மென்பொருள் மற்றும் NHMWriter  இருந்தால் (Live Spaces, SharePoint, Wordpress, Blogger and many others) மிக அழகான முறையில் தமிழில் டைப் செய்து Pulish என்ற பட்டனை தட்டினால் போதும் பதிவு உங்கள் வலைத்தளதில்

மேல் விபரம் அறிய கீழ்கானும் இனையபக்கம் பார்க்கவும்

http://get.live.com/writer/overview

http://windowslivewriter.spaces.live.com/

http://www.microsoft.com/DOWNLOADS/details.aspx?FamilyID=d2baeda0-aa9a-4080-9202-1f23902d1169&displaylang=en

Friday, September 19, 2008

தகவல் தொழில்நுட்பம்

தகவல் தொழில்நுட்பத்தில் ”தலை” சிறந்து விளங்குவது சாட்டிலைட். இதனால்தான் இன்று கண்டம் விட்டு கண்டம் டிவியைப் பார்க்க முடிகிறது. ரேடியோ, டெலிபோன், இண்டர்நெட்,ராணுவதொடர்பு, வானவியல் ஆராய்ச்சி,பூமியை படம் பிடித்து ஆராய்தல் போன்ற அனைத்தும் தகவல் தொழில்நுட்பத்தில் பயன்படுவதால் எப்போதும்மில்லாத விரைவான வளர்ச்சி எல்லா துறைகளிலும் காணப்படுகிறது.

பூமியிலிருந்து 300 கி.மி. உயரத்திலிருக்கும் சாட்டிலைட் 90 நிமிடங்களில் பூமியை சுற்றும். அதேபோல 36,000 கீ.மீ. உயரத்தில் நிலை நிறுத்தும்போது அது பூமியை சுற்றிவர 24 மணி நேரமாகிறது. இந்தக் கணக்கில்தான் நமக்கு தேவையான திசையில் நிலை நிறுத்தும்போது தொடர்ச்சியாக நமக்கு நேர் உச்சியில் நின்று தொடர்புகொள்கிறது.

ஓரு சாட்டிலைட் குறைந்தது 10 வருடங்கள் ஆயுளுடன் சுற்றிவருகிறது. இதற்கான சக்தி சூரியனிடமிருந்தே பெறப்படுகிறது.

Saturday, June 28, 2008

கஸ்டமர் (வாடிக்கையாளர்)

கஸ்டமர் (வாடிக்கையாளர்) என்பவர் ஒருவருக்காகத்தான் நாம் இங்கு இருக்கிறோம், ஏன் என்றால் அவர் தான் நம்முடைய அனைத்து தோவைகளுக்கு உடையா ரசீது மற்றும் சம்பளம் போன்ற வற்றை தருகின்றர், மேலும் நம்மை வியாபரத்தில் நீடிக்க செய்கின்றார், அதனால் அவருடைய தேவைகளை நாம் புரிந்து கொள்வது மிக அவசியம் அப்போது தான் நாம் அவருடைய தேவைகளை மிகச்சரியா நிறைவேற்ற முடியும்.

சரி இப்போது கஸ்டமர் (வாடிக்கையாளர்) அவர்களுடைய தேவைகள் என்ன என்பதை பார்ப்போம்

1. நம்பகத்தக்க தன்மை, (Reliability) (அதாவது நாம் என்ன சொன்னோமே அதை செய்வது, முடிந்தால் அதிகம் செய்வது, அதே நேரத்தில் சொன்னதை விட குறைவாக செய்யாமல் இருப்பது)

2. வேகம் (Speed)(இந்த இனைய உலகில் வேகம் மிகவும் முக்கியம் அது தற்போது எப்படி என்றால் அது மாதத்திலா, வாரத்திலா, நாட்களிலா என்று கேட்டல் இல்லை உடனே கேட்டவுடன் பொருள் கையில் வேண்டும், இது நிருவனத்தின் போட்டித் தன்மையை மேன்படுத்த உதவும்)

3. அறிந்து கொள்ளுதல் (Empathy) (எல்லா வாடிக்கையாலரையும் ஒரே நேரத்தில் திருப்தி படுத்த முடியாது, அதே நேரத்தில் அவர்களுடைய வருத்தம், கோபம், ஏமாற்றம் அகியவற்றறை உனர்ந்து அவர்களிடம் நாம் புரிந்து கொண்டதை தெரிவித்துக்கொண்டு மேலும் இது போல் நடக்காமல் பார்த்த கொள்வதாக உறுதி கூறவேண்டும்)

4. அறிவுத்தன்மை ( Knowledge)(அறிவுத்தன்மை நாம் நிறுவனத்தின் மீது உள்ள மதிப்பை வாடிக்கையாளர் இடையே உயர்த்துகின்றது மேலும் அது பிரச்சனைகளுக்கு மிக விரைவாக விடைகாண உதவுகின்றது.)

5. பார்க்க மற்றும் உணரக்கூடியவைகள் (Tangibility) (வாடிக்கையாளர் பாக்ககூடிய மற்றும் தொடக்கூடிய யாவும் அது உங்கள் தொழிலாளி உடை மற்றும் அழகு தோற்றம், நிருவனத்தின் இடம், விளம்பரம்)

6. விலை (Value) (பொருள் விரைவாகவும், உழைக்ககூடியதாகவும், நம்பிக்கை உடையதாகவும், கிடைத்தாள் மக்கள் விலை அதிகம் தந்து பெற தவறுவதில்லை)

ஒவ்வொறு வாடிக்கையாளரின் தேவை மற்ற வாடிக்கையாளரின் தேவையை விட மாறுபட்டு இறுக்கும் அதாவது ஓருவருக்கு விலை முக்கியமானதாக இருக்கும் மற்றவருக்கு பொருள் விரைவாக கிடைக்க கூடியது முக்கியமானதாக இருக்கும் அகையால் நாம் நம்முடைய வாடிக்கையாளரின் தேவை அறிந்து அவர்களுக்கு எற்றார் போல அறிந்து செயல்பட்டல் வெற்றி நிச்சயம்

இன்னும் வளரவேண்டும்...

எனக்கு எல்லாம் இருக்கு; இதுக்கு மேல ஒண்ணும் தேவையில்லை. அப்புறம் நான் ஏன் அலட்டிக்கணும்?’’ என்று வாழ்வின் மிக உயரிய நிலையைத் தொட்டவர்களைப் போல சிலர் கேட்பது எனக்கு வியப்பைத் தருகிறது.

600 கோடி ரூபாய்க்கு வருட வர்த்தகம் செய்யும் ஒரு மிகப்பெரிய தமிழகத் தொழிலதிபரைக் கேட்டேன். ‘‘என்ன, மன நிறைவுதானே?’’ ‘‘நிச்சயம் நிறைவுதான். ஆனாலும் இதோடு திருப்தியடைந்துவிட முடியுமா? அடுத்த இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி நகர ஆரம்பித்தாயிற்று.’’

‘‘இன்னும் வளரவேண்டும்தான். ஆனால் இதற்கு எல்லைதான் என்ன?’’

‘‘ஒரு தொழிலில் திருப்தி அடைந்துவிடுவது என்பது தேக்கம் அடைவதற்குச் சமம். தேக்கம் வந்துவிட்டால் அது சரிவின் ஆரம்பம் என்பேன்.

தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. அம்பானி சகோதரர்களிடம் கேட்டுப்பாருங்களேன், திருப்திதானே என்று! இன்னும் வளர்ந்தால் எத்தனையோ பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளும், மறைமுக வேலை வாய்ப்புகளும் தர என் நிறுவனம் காரணமாக இருக்குமே!’’

இப்படி அவர் மண்டைப் போடாகப் போட்ட பிறகு ஆசைதான் துன்பங்களுக்குக் காரணம் என்கிற புத்தரின் போதனையையும், ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்கிற நம் சான்றோரின் வாக்கையும் வைத்து இவரை வாதத்தில் வென்றுவிட முடியும் என்கிற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது.

‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்கிற பாடல் வரிகள் 60களில் நன்கு எடுப்பட்டன. இன்று ‘உனக்கு மேலே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நீயூம் உயரு’ என்று புதுக் கவிதை பாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஒகேனக்கலில் பரிசல்காரர்கள் நீரோட்டத்தை எதிர்த்து திறமையாகப் பரிசலை நகர்த்துகிறார்கள். வேகமான நீரோட்டத்திற்கு எதிராக ஒரு கைத் துடுப்பு என்ன பெரிதாகச் செய்து விடமுடியும்?

ஆனாலும் மெல்ல, அழகாக முன்னேறுகிறார்கள். இலக்கில் சரியாகக் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். பிறகுதான் வியர்வையைத் துடைக்கிறார்கள். இப்படி நீரோட்டத்திற்கு எதிராகத் துடுப்புப் போடுவதை நிறுத்திவிட்டு சாவகாசமாக வியர்வையைத் துடைத்தால் நாம் எங்கே கொண்டு போய்த் தள்ளப்படுவோம் என்று சிந்தித்துப் பார்த்தேன்.

வாழ்விலும் இதேதான். போட்டிமயத்தில் எவ்வளவு முன்னதாகப் போனாலும் நூறாவது ஆளாக ஆகிவிடுகிற நாம், நம் போட்டி உணர்வையும் வளர்ச்சியில் காட்டும் தாகத்தையும் திருப்தியடைந்த நிலையில் ஒதுக்கிவைத்தால் நாம் எங்கே கொண்டுபோய் நிறுத்தப்படுவோம் என்று எண்ணிப் பாருங்கள்.

வளர்ச்சியில் தாகம் காட்டாத வரை இருக்கிற இடத்தைக் காப்பாற்றிக் கொள்வதே கடினமாகிவிடும். நாளும் படிப்படியான முன்னேற்றம். அல்லது அங்குல முன்னேற்ற மேனும். இதுதான் இந்த நிமிடத்திற்கு வேண்டிய முக்கியச் சிந்தனை.

நன்றி குமுதம்

பணவீக்கம் என்றால் என்ன? எதை வைத்து முடிவு செய்கிறார்கள்? எதனால் வருகிறது?

பணவீக்கம் என்றால் என்ன? எதை வைத்து முடிவு செய்கிறார்கள்? எதனால் வருகிறது?

``காற்று ஊத ஊத, பலூன் வீக்கம் அடைகிற மாதிரி, விலைகள் வீங்குவதுதான் பணவீக்கம். இன்பிளேஷன்.

முன்பு 100 ரூபாய் கொடுத்து வாங்கிய பொருட்களின் விலை 105 ஆகிவிட்டால், பணவீக்கம் ஐந்து சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதே பொருட்களை வாங்குவதற்கு 109 ரூபாய் தேவைப்பட்டால், பணவீக்கம் ஒன்பது சதவிகிதம்.

மாதம் ரூ.3000 செலவு செய்யும் குடும்பத்திற்கு பணவீக்கம் 9% ஆனால், செலவிற்கு ரூ.3270 அதாவது ரூ.270 கூடுதலாக தேவைப்படும். இல்லாதவர்கள் எப்படிச் சமாளிப்பது என்கிறீர்களா? இரண்டே வழிகள்தான். ஒன்று, வாங்கும் அளவைக் குறைத்துக்கொள்வது (அடிக்க வராதீர்கள்). அல்லது கடன் வாங்குவது ( இதற்கு அதுவே மேலோ!).

தற்சமயம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவாக 8
சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறது பணவீக்கம். நம் நாட்டில்தான் என்றில்லை. இப்போது உலகெங்கிலுமே விலைவாசி உயர்வுதான் பெரிய பிரச்னை. சீனா 8.7%, ரஷ்யா 12 % க்கும் மேல், சவுதி அரேபியா 9.8%, ஹாங்காங், சிங்கப்பூர் எல்லாம் 6% க்கும் மேல். இவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவதுபோல, வியட்நாமின் பணவீக்கம் 25%.

நன்றி குமுதம்

Tuesday, May 20, 2008

காலண்டர்

பூமி இரவு பகலாய் மாறி 365 நாட்கள் 5 மணி நேரம் 48 நிமிடங்கள் 46 நொடிகளில் சுற்றி நாட்களின் கணக்குகளைக் கொண்டதே காலண்டர் என்கிடறோம். இது விவசாயத்தில் பயிரிட, அறுவடை செய்ய, மழை வருவதையறிய பெரிதும் பயன் படுகிறது மற்றும் தொழில் சம்பந்தங்களிலும் மத விசேஷங்களிலும். அன்றாட வாழ்வியலுக்கும் இன்றியமையாததாகிறது. தற்போது நாம் பயன் படுத்துவது ”கிரிகோரியன்” முறையாகும். இது சூரியனை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது. வருடத்தில் ஒரு நாள் விகிதத்தை சரி செய்ய 4 வருடத்திற்கு ஒரு நாள் பிப்ரவரி மாதம் 29 நாளாக கணக்கிடப்படுகிறது. இது லிப் வருடமட எனப்படும். (இஸ்லாமிய தேதிகள் சந்திரனை வைத்து கணக்கடப்படுகிறது.)

Sunday, February 17, 2008

காதில் விழுந்த கலக்கல் மொழிகள்

சிக்கல்கள் உருவாகுமோ என்று கவலைப்படுங்கள்
ஆனால் சிக்கல்களை உருவாக்கும் அளவு கவலைப்படாதீர்கள்.
------------------------------------------------------------
எங்கிருந்து வருகிறீர்கள் என்று திரும்பிப்பாருங்கள்,
எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும்
------------------------------------------------------------
உறைபனி போல உயிர் உலுக்கும் அச்சங்களை
உதிக்கும் கதிர்போல உருக வைப்பதே நம்பிக்கை

Saturday, February 09, 2008

என் வீட்டு நாள்காட்டியில்.!

எண்ணம் ஒரு துளிர்,
பேச்சு ஒரு மொட்டு,
செய்கை அதன் பின்னால் உள்ள பழம்!

======================================

எப்படி ஒரு பூச்சி ஆடையை அரிக்கிறதோ,
அப்படியே பொறாமை மனிதனை அரிக்கிறது!

Tuesday, February 05, 2008

வாடிக்கையாளர்கள்

கர்சன்பாய் படேல வாஷிங்பவுடர் நிர்மாவின் அதிபர்.

வாடிக்கையாளர்கள் என்பவர்கள் மூன்று வகையினர். முதலாமவர்கள் நம்மிடமிருந்து விலகிப் போனவர்கள். இவர்கள் ஏன் விலகினார்கள் என்று ஆராய்ந்தால் நல்ல தீர்வுகள், விடைகள் கிடைக்கும்.

அடுத்தவர்கள் நம்முடன் இருப்பவர்கள். இவர்களை எப்போதும் தக்க வைத்துக் கொள்வதில் குறிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்பதால் நமக்கு ஆணவம், அலட்சியம் வந்து விடக் கூடாது. இது வந்தால் நம்மிடமிருந்து விலகி விடுவார்கள்.

மூன்றாமவர்கள், இனி வரப் போகிறவர்கள். இவர்கள் மீது அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். இவர்களை எப்படிக் கவரலாம், எப்படி இழுத்துப் போடலாம் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இப்படி கவனம் செலுத்தினால் வாடிக்கையாளர்களை அப்படியே நம்மிடம் கட்டிப் போட்டுவிடலாம்.

Saturday, December 30, 2006

தெரியுமா உங்களுக்கு..?

அனல் மின் நிலையங்களில் நாளொன்றுக்கு பத்தாயிரம் டன் நிலக்கரியை எரித்து சில ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தான் தயாரிக்க முடியும்.

அதற்குப் பதிலாக சிறிய ஏரியில் இருக்கும் தண்ணீரில் உள்ள டியூட்டீரியம் மற்றும் டிரிஷியத்தை பிரித்தெடுத்து அவற்றை பிணைத்து மின்சாரம் தயாரித்தால் இந்த உலகத்துக்கே பல நூறு ஆண்டுகளுக்கு தாராளமாக மின்சாரத்தை தயாரித்துக் கொடுக்கலாம். இந்த முறையில் கதிரியக்க ஆபத்தும் இல்லை.

ஆனால், இதற்கான தொழில் நுட்ப சாத்தியம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது இதற்கான ஆய்வுக்கு ஆயிரம் கோடி யூரோ ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

Friday, November 10, 2006

குட்டீஸ் கார்னர்

குழந்தைகளிடம் பல்வேறு துறைகளைப் பற்றிக் கூறலாம். தெரிந்த விஷயங்கள் என்றாலும் அத்துறைகளுக்கான பெயர்களைக் கூறும் போது ஆவலாகக் கேட்பார்கள்.

வானியல் - ASTRONOMY

மண்ணியல் - GEOLOGY

உடற்கூறியல் - ANATOMY

கனிம இயல் - MINEROLOGY

உலோகத் தொழிலியல் - METALLURGY

அண்டப்பிறப்பியல் - COSMOLOGY

தோட்டக்கலை – HORTICULTURE

கால்நடை விலங்கியல் - ANIMAL HUSBANDRY

பால் பண்ணை – DAIRY

தேனீ வளர்த்தல் - BEE KEEPING

முத்துக் குளித்தல் - PEARL DIVING

கப்பல் கட்டுதல் - SHIP BUILDING

கழிவுநீர் வடிகால் - DRAINAGE

போர்க்கலை – WARFARE

உணவுப்பங்கீட்டு முறை – RATIONING

உணவுப்பதப்படுத்துதல் - FOOD PROCESSING

Friday, October 27, 2006

குட்டீஸ் கார்னர்!

விடை தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கும் அனைவருக்கும் விடை இதோ

1. சட்டை போடாதவன் ஆனாலும் சட்டையைக் கழற்றுடுவான்.

விடை : பாம்பு

2. வாலில் வைத்திருப்பான் வகையான ஆயுதம்.

விடை : தேள்

3. கறுப்பனுக்கு வயதானால் வெள்ளையன்.

விடை : தலைமுடி

4. அம்மா என்றழைத்தவனுக்கு அடுத்த வார்த்தை தெரியாது.

விடை : பசு

5. இனிக்கும் கைத்தடி ஓங்கினால் தடியடி.

விடை : கரும்பு

Thursday, October 26, 2006

குட்டீஸ் கார்னர்!

இப்புதிய பகுதி மலர்ந்ததின் நோக்கம்., எவ்வளவு ‘பெரிய மனிதராக’ இருந்தாலும் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் அந்த பத்து நிமிடம் தான் நமக்கு கிடைக்கும் சந்தோஷத்தில் முழுமையான சந்தோஷத்தை அளிக்கக் கூடியதாக, அதாவது கவலைகளை மறந்து நாம் செலவிடும் மணித்துளிகளாக அமைகிறது..! அப்படி நாம் அவர்களை குதூகலப்படுத்துவதற்கு வகை, வகையான விஷயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டாமா?! அதைத் தான் இப்பகுதியில் பகிர்ந்துக் கொள்ளப் போகிறோம்! அப்படி குட்டி இளவரசி(சர்)களைக் கவரும் விஷயங்கள் உங்களை கவர்ந்திருந்தால் இப்பகுதியில் பகிர்ந்துக் கொள்ளலாமே..!

ஏனெனில் எங்கள் வீட்டுக் குட்டீஸ்களிடம் நாங்களும் கலக்குவோமல்லவா..!

விடுகதைகள்

1. சட்டை போடாதவன் ஆனாலும் சட்டையைக் கழற்றுடுவான்.
2. வாலில் வைத்திருப்பான் வகையான ஆயுதம்.
3. கறுப்பனுக்கு வயதானால் வெள்ளையன்.
4. அம்மா என்றழைத்தவனுக்கு அடுத்த வார்த்தை தெரியாது.
5. இனிக்கும் கைத்தடி ஓங்கினால் தடியடி.

இதன் விடை நாளைய பக்கத்தில். அதற்கிடையில் குட்டீஸ்களிடம் புதிர் போட்டு விடை தெரியாமல் நீங்கள் மாட்டிக் கொண்டால் நாங்கள் பொருப்பல்ல., ஹி..ஹி..!

Thursday, October 12, 2006

ஓ…அப்படியா..!

ஆண்களின் குரல்வளை பெண்களின் குரல்வளையை விடப் பெரியது. இதுவே ஆண்களின் குரல் கனமாக, கடினமானதாக இருப்பதற்குரிய காரணமாகும்.

அசைவிற்கு ஏற்ப தொண்டையில் உள்ள அதிர்வு நாளங்கள் சுருங்கி விரிந்து செயல்படும் போது துருத்திக் கொண்டுள்ள குருத்தெலும்பானது இனிமையான, கடினமான குரலுக்கு காரணமாய் இருக்கிறது.

இந்த குருத்தெலும்பை ஆண்களின் கழுத்துப் பகுதியில் காணலாம். அதன் பெயர் ‘ஆடம்ஸ் ஆப்பிள்’ எனக் கூறுவார்கள்.

Tuesday, October 10, 2006

படித்ததில் ரசித்தது..!

மரணவலி தான்
மனம் தளராதே..!
தரையிறங்கும்
நேரமிப்போது..!
முட்டு…முயற்சி செய்…
சுகப்பிரசவம் என்பது
சும்மாயில்லை
மாநகரப் பேருந்து
நெரிசலிலிருந்து…!

Friday, September 29, 2006

கண்ணதாசன் vs இறைவன்

“பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
‘பிறந்து பார்’ என இறைவன் பணித்தான்.
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
‘இறந்து பார்’ என இறைவன் சொன்னான்.
‘மனையாள் சுகம் யாதெனக் கேட்டேன்.
‘மணந்து பார்’ என இறைவன் பணித்தான்.
‘அனுபவித்தே அறிவது வாழ்வெனின்
இறைவா நீ ஏன்? என்றேன்.
இறைவன் சற்றே அருகில் வந்து
“அனுபவம் என்பதே நான் தான்” என்றான்.

கண்ணதாசனின் கவிதை வரிகள்....