Friday, September 29, 2006

கண்ணதாசன் vs இறைவன்

“பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
‘பிறந்து பார்’ என இறைவன் பணித்தான்.
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
‘இறந்து பார்’ என இறைவன் சொன்னான்.
‘மனையாள் சுகம் யாதெனக் கேட்டேன்.
‘மணந்து பார்’ என இறைவன் பணித்தான்.
‘அனுபவித்தே அறிவது வாழ்வெனின்
இறைவா நீ ஏன்? என்றேன்.
இறைவன் சற்றே அருகில் வந்து
“அனுபவம் என்பதே நான் தான்” என்றான்.

கண்ணதாசனின் கவிதை வரிகள்....

No comments: