Tuesday, September 19, 2006

ஹா ஹா!

புகழ் மிக்க ஆங்கிலக் கவி காலரிட்ஜிடம் ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் லாம்ப் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அடிக்கடி அவரோடு பேசிப்பழக ஆரம்பித்தார்.

ஒரு நாள்:

முன்னர் தாம் செய்த பிரசங்கங்களைச் சார்லஸ் லாம்பிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார் காலரிட்ஜ். “சார்லஸ்! நான் பிரசங்கம் செய்து நீங்கள் கேட்டதில்லை தானே?” என்று வினவினார்.

சார்லஸ் லாம்ப் சொன்னார்: “உங்களிடம் நான் பிரசங்கத்தைத் தவிர வேறெதையுமே இது வரையிலும் கேட்டதில்லையே” என்றார்.

2 comments:

சீமாச்சு.. said...

ரொம்ப சுவையான பதிவுகள். மக்கள் யாரும் பின்னூட்டம் போட்டு உங்கள் பதிவுகளைப் பாராட்டாவிட்டாலும்... தொடர்ந்து எழுதுங்கள்..

நல்லவை எந்நாளும் நிலைத்து நிற்கும்.
அன்புடன்,
சீமாச்சு...

ZuhainaFaizal said...

நண்பர் சீமாச்சு அவர்களே தொடர்ந்து எழுத உங்களை போல் உள்ளவர்களில் பாராட்டு எனக்கு ஊக்கம் அளிக்கின்றது தங்களின் கருத்துக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!