Sunday, September 17, 2006

அட அப்படியா?! பகுதி 2

மீன்களும் அதன் பயன்களும்.

பால் சுறா - நோய்களுக்கும், ஈன்ற தாய்மார்களுக்கும் பயன்மிக்கது.

நட்சத்திர மீன் - சோர்வுற்ற தசைகளைத் தூண்டக்கூடிய மருந்துப்பொருட்கள் இம்மீனிலிருந்து பெறப்படுகிறது.

திருக்கை மீன் - இம்மீனின் வாலிலுள்ள கொடுக்குப் போன்ற முள்ளின் விடம், இருதய அறுவை சிகிச்சைக்கு பயன்படுகிறது.

தேரை மீன் - இதன் உடலிலிருந்து உண்டாகும் ரசாயனப் பொருள் இரத்தத்திலுள்ள சர்க்கரையை அழித்து விடுகிறதாம்.

கடல் வெள்ளரி மீன் - புற்று நோய்க்கு மருந்து.

சிப்பிலி - இதனிலிருந்து வெளிப்படும் பொருள் இளம்பிள்ளை வாதம், இன்புளுவென்சாவுக்கு, மருந்தாகவும், இரத்தம் உறைவதைத் தடுப்பதற்கு அறுவை சிகிச்சைக்கு தேவையான ஆற்றலை அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆக்டபஸ் - இதன் உமிழ்நீர் விடமாக இருப்பினும், அதனால் இருதய நோயை குணப்படுத்த முடிகிறதாம்.

கடல் நத்தை – நோயை எதிர்க்ககூடிய ஆன்டிபயாடிக் தயாரிக்கப்படுகிறது.

கடல் முள்ளெலி - இதிலிருந்து எடுக்கப்படும் விடம் புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றலுடையதாம்.

காட் மீன் - ஏ, டி, இ வைட்டமின்கள் கிடைக்கின்றன.

டிரங்க் மீன் - கைகால் வலிப்பு, நரம்பு தொடர்பான நோய்களுக்கு மருந்து கிடைக்கிறது.

டூனி மீன் - நீரிழிவு நோயைப் போக்குதற்குறிய இன்சுலின் பெறப்படுகிறது.

கடல் விசிறி - இப்பிராணியிலிருந்து எடுக்கப்படும் மருந்துப் பொருள், குடல் புண்களைக் குணமாக்கவும் இயங்கு தசையை முடுக்கிவிடவும், ஆஸ்துமா இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

(மிக்க மேலானவன்)

No comments: