Wednesday, September 20, 2006

குழப்பம்...

என்ன தொழில் தொடங்குவது அல்லது எவ்வாறு நம் எதிர்காலத்தை திட்டமிடுவது என்று என்னுள் ஓரு சில மாதங்கள் குழப்பமாகவே இருக்கிறது நாம் இவ்வாறு குழம்பிக் கொண்டே இருப்பது சரிதான? என்று என்னிய போது பா நந்தன் அவர்கள் எழுதிய குழப்பம்... எனும் இக் கவிதை என் கண்ணில் பட்டது அவற்றில் சில வரிகள் இங்கே

குழப்பமில்லாமல்
தத்துவங்களும் விஞ்ஞானமும் இல்லை.

ஆப்பிள் ஏன் கீழே விழுந்ததென்று குழம்பாவிடில்
புவிஈர்ப்பின் அவசியம் தெரிந்திருக்காது.
பறவைகள் மட்டுமேன் பறக்கின்றனவென்று குழம்பாவிடில்
விமானத்தின் கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்காது.

ஆனால் இன்று நீங்கள்
குழம்புவதை நிறுத்தி விட்டீர்கள்.
தெளிவு என்னும் அறியாமையில்
மூழ்கி விட்டீர்கள்.

எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டீர்கள்.
அல்லது கண்மூடித்தன்மாய் எதிர்க்கத் தொடங்கி விட்டீர்கள்.
அதனால் குட்டையைப்போல்
ஒரே இடத்தில் தேங்க ஆரம்பித்து விட்டீர்கள்.

ஆதலால் எல்லோரும் குழம்பிக் கொண்டே இருங்கள்.
நதி போல் என்றும் பயணித்துக் கொண்டே இருங்கள்."

படித்து முடித்தவுடன் என்னுள் ஓர் தெளிவு நன்றி பா நந்தன் அவர்களே...

கவிதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

No comments: