Wednesday, September 27, 2006

அறிந்துக் கொள்வோமே..!



விலங்குகளில் விசித்திரமானது கங்காரு. அதற்கு நடக்கத் தெரியும், தாவத் தெரியும். ஓடத் தெரியாது. நீளம் தாண்டுதவதில் மனிதனின் சாதனையை வென்று விடும். 30 அடிகள் தாவும். ஆதன் நீண்ட தடித்த வால், தாவுதற்கேற்ற முறையில் அமைந்தது.

பிறக்கும் போது ஓர் அங்குல அளவில் இருக்கும் குட்டியை வயிற்றுப் பையில் வைத்துக் காப்பாற்றும். அக்குட்டி ஐந்து மாதங்களில் ஒன்றே முக்கால் அடியாக வளர்ந்து விடும். ஆறடி அம்மாவுக்கு ஓரங்குல குழந்தை என்னும் புதிருக்கு இதுவே விடையாகும்.

குட்டியோ எட்டாம் மாதத்தில் பையிலிருந்து வெளியே வந்து இரை தேடும். தன்னைப் பிடிக்க வரும் வேட்டை நாய்களைப் பின்னங்கால்களால் உதைத்துச் சிதைத்து விடும்.

(மிக்க மேலானவன்)

No comments: