சிக்கல்கள் உருவாகுமோ என்று கவலைப்படுங்கள்
ஆனால் சிக்கல்களை உருவாக்கும் அளவு கவலைப்படாதீர்கள்.
------------------------------------------------------------
எங்கிருந்து வருகிறீர்கள் என்று திரும்பிப்பாருங்கள்,
எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியும்
------------------------------------------------------------
உறைபனி போல உயிர் உலுக்கும் அச்சங்களை
உதிக்கும் கதிர்போல உருக வைப்பதே நம்பிக்கை
சும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ!
Sunday, February 17, 2008
Saturday, February 09, 2008
என் வீட்டு நாள்காட்டியில்.!
எண்ணம் ஒரு துளிர்,
பேச்சு ஒரு மொட்டு,
செய்கை அதன் பின்னால் உள்ள பழம்!
======================================
எப்படி ஒரு பூச்சி ஆடையை அரிக்கிறதோ,
அப்படியே பொறாமை மனிதனை அரிக்கிறது!
பேச்சு ஒரு மொட்டு,
செய்கை அதன் பின்னால் உள்ள பழம்!
======================================
எப்படி ஒரு பூச்சி ஆடையை அரிக்கிறதோ,
அப்படியே பொறாமை மனிதனை அரிக்கிறது!
Tuesday, February 05, 2008
வாடிக்கையாளர்கள்
கர்சன்பாய் படேல வாஷிங்பவுடர் நிர்மாவின் அதிபர்.
வாடிக்கையாளர்கள் என்பவர்கள் மூன்று வகையினர். முதலாமவர்கள் நம்மிடமிருந்து விலகிப் போனவர்கள். இவர்கள் ஏன் விலகினார்கள் என்று ஆராய்ந்தால் நல்ல தீர்வுகள், விடைகள் கிடைக்கும்.
அடுத்தவர்கள் நம்முடன் இருப்பவர்கள். இவர்களை எப்போதும் தக்க வைத்துக் கொள்வதில் குறிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்பதால் நமக்கு ஆணவம், அலட்சியம் வந்து விடக் கூடாது. இது வந்தால் நம்மிடமிருந்து விலகி விடுவார்கள்.
மூன்றாமவர்கள், இனி வரப் போகிறவர்கள். இவர்கள் மீது அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். இவர்களை எப்படிக் கவரலாம், எப்படி இழுத்துப் போடலாம் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இப்படி கவனம் செலுத்தினால் வாடிக்கையாளர்களை அப்படியே நம்மிடம் கட்டிப் போட்டுவிடலாம்.
வாடிக்கையாளர்கள் என்பவர்கள் மூன்று வகையினர். முதலாமவர்கள் நம்மிடமிருந்து விலகிப் போனவர்கள். இவர்கள் ஏன் விலகினார்கள் என்று ஆராய்ந்தால் நல்ல தீர்வுகள், விடைகள் கிடைக்கும்.
அடுத்தவர்கள் நம்முடன் இருப்பவர்கள். இவர்களை எப்போதும் தக்க வைத்துக் கொள்வதில் குறிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்பதால் நமக்கு ஆணவம், அலட்சியம் வந்து விடக் கூடாது. இது வந்தால் நம்மிடமிருந்து விலகி விடுவார்கள்.
மூன்றாமவர்கள், இனி வரப் போகிறவர்கள். இவர்கள் மீது அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். இவர்களை எப்படிக் கவரலாம், எப்படி இழுத்துப் போடலாம் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இப்படி கவனம் செலுத்தினால் வாடிக்கையாளர்களை அப்படியே நம்மிடம் கட்டிப் போட்டுவிடலாம்.
Saturday, December 30, 2006
தெரியுமா உங்களுக்கு..?
அனல் மின் நிலையங்களில் நாளொன்றுக்கு பத்தாயிரம் டன் நிலக்கரியை எரித்து சில ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை தான் தயாரிக்க முடியும்.
அதற்குப் பதிலாக சிறிய ஏரியில் இருக்கும் தண்ணீரில் உள்ள டியூட்டீரியம் மற்றும் டிரிஷியத்தை பிரித்தெடுத்து அவற்றை பிணைத்து மின்சாரம் தயாரித்தால் இந்த உலகத்துக்கே பல நூறு ஆண்டுகளுக்கு தாராளமாக மின்சாரத்தை தயாரித்துக் கொடுக்கலாம். இந்த முறையில் கதிரியக்க ஆபத்தும் இல்லை.
ஆனால், இதற்கான தொழில் நுட்ப சாத்தியம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது இதற்கான ஆய்வுக்கு ஆயிரம் கோடி யூரோ ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
அதற்குப் பதிலாக சிறிய ஏரியில் இருக்கும் தண்ணீரில் உள்ள டியூட்டீரியம் மற்றும் டிரிஷியத்தை பிரித்தெடுத்து அவற்றை பிணைத்து மின்சாரம் தயாரித்தால் இந்த உலகத்துக்கே பல நூறு ஆண்டுகளுக்கு தாராளமாக மின்சாரத்தை தயாரித்துக் கொடுக்கலாம். இந்த முறையில் கதிரியக்க ஆபத்தும் இல்லை.
ஆனால், இதற்கான தொழில் நுட்ப சாத்தியம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது இதற்கான ஆய்வுக்கு ஆயிரம் கோடி யூரோ ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
Friday, November 10, 2006
குட்டீஸ் கார்னர்
குழந்தைகளிடம் பல்வேறு துறைகளைப் பற்றிக் கூறலாம். தெரிந்த விஷயங்கள் என்றாலும் அத்துறைகளுக்கான பெயர்களைக் கூறும் போது ஆவலாகக் கேட்பார்கள்.
வானியல் - ASTRONOMY
மண்ணியல் - GEOLOGY
உடற்கூறியல் - ANATOMY
கனிம இயல் - MINEROLOGY
உலோகத் தொழிலியல் - METALLURGY
அண்டப்பிறப்பியல் - COSMOLOGY
தோட்டக்கலை – HORTICULTURE
கால்நடை விலங்கியல் - ANIMAL HUSBANDRY
பால் பண்ணை – DAIRY
தேனீ வளர்த்தல் - BEE KEEPING
முத்துக் குளித்தல் - PEARL DIVING
கப்பல் கட்டுதல் - SHIP BUILDING
கழிவுநீர் வடிகால் - DRAINAGE
போர்க்கலை – WARFARE
உணவுப்பங்கீட்டு முறை – RATIONING
உணவுப்பதப்படுத்துதல் - FOOD PROCESSING
வானியல் - ASTRONOMY
மண்ணியல் - GEOLOGY
உடற்கூறியல் - ANATOMY
கனிம இயல் - MINEROLOGY
உலோகத் தொழிலியல் - METALLURGY
அண்டப்பிறப்பியல் - COSMOLOGY
தோட்டக்கலை – HORTICULTURE
கால்நடை விலங்கியல் - ANIMAL HUSBANDRY
பால் பண்ணை – DAIRY
தேனீ வளர்த்தல் - BEE KEEPING
முத்துக் குளித்தல் - PEARL DIVING
கப்பல் கட்டுதல் - SHIP BUILDING
கழிவுநீர் வடிகால் - DRAINAGE
போர்க்கலை – WARFARE
உணவுப்பங்கீட்டு முறை – RATIONING
உணவுப்பதப்படுத்துதல் - FOOD PROCESSING
Friday, October 27, 2006
குட்டீஸ் கார்னர்!
விடை தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கும் அனைவருக்கும் விடை இதோ
1. சட்டை போடாதவன் ஆனாலும் சட்டையைக் கழற்றுடுவான்.
விடை : பாம்பு
2. வாலில் வைத்திருப்பான் வகையான ஆயுதம்.
விடை : தேள்
3. கறுப்பனுக்கு வயதானால் வெள்ளையன்.
விடை : தலைமுடி
4. அம்மா என்றழைத்தவனுக்கு அடுத்த வார்த்தை தெரியாது.
விடை : பசு
5. இனிக்கும் கைத்தடி ஓங்கினால் தடியடி.
விடை : கரும்பு
1. சட்டை போடாதவன் ஆனாலும் சட்டையைக் கழற்றுடுவான்.
விடை : பாம்பு
2. வாலில் வைத்திருப்பான் வகையான ஆயுதம்.
விடை : தேள்
3. கறுப்பனுக்கு வயதானால் வெள்ளையன்.
விடை : தலைமுடி
4. அம்மா என்றழைத்தவனுக்கு அடுத்த வார்த்தை தெரியாது.
விடை : பசு
5. இனிக்கும் கைத்தடி ஓங்கினால் தடியடி.
விடை : கரும்பு
Thursday, October 26, 2006
குட்டீஸ் கார்னர்!
இப்புதிய பகுதி மலர்ந்ததின் நோக்கம்., எவ்வளவு ‘பெரிய மனிதராக’ இருந்தாலும் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் அந்த பத்து நிமிடம் தான் நமக்கு கிடைக்கும் சந்தோஷத்தில் முழுமையான சந்தோஷத்தை அளிக்கக் கூடியதாக, அதாவது கவலைகளை மறந்து நாம் செலவிடும் மணித்துளிகளாக அமைகிறது..! அப்படி நாம் அவர்களை குதூகலப்படுத்துவதற்கு வகை, வகையான விஷயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டாமா?! அதைத் தான் இப்பகுதியில் பகிர்ந்துக் கொள்ளப் போகிறோம்! அப்படி குட்டி இளவரசி(சர்)களைக் கவரும் விஷயங்கள் உங்களை கவர்ந்திருந்தால் இப்பகுதியில் பகிர்ந்துக் கொள்ளலாமே..!
ஏனெனில் எங்கள் வீட்டுக் குட்டீஸ்களிடம் நாங்களும் கலக்குவோமல்லவா..!
விடுகதைகள்
1. சட்டை போடாதவன் ஆனாலும் சட்டையைக் கழற்றுடுவான்.
2. வாலில் வைத்திருப்பான் வகையான ஆயுதம்.
3. கறுப்பனுக்கு வயதானால் வெள்ளையன்.
4. அம்மா என்றழைத்தவனுக்கு அடுத்த வார்த்தை தெரியாது.
5. இனிக்கும் கைத்தடி ஓங்கினால் தடியடி.
இதன் விடை நாளைய பக்கத்தில். அதற்கிடையில் குட்டீஸ்களிடம் புதிர் போட்டு விடை தெரியாமல் நீங்கள் மாட்டிக் கொண்டால் நாங்கள் பொருப்பல்ல., ஹி..ஹி..!
ஏனெனில் எங்கள் வீட்டுக் குட்டீஸ்களிடம் நாங்களும் கலக்குவோமல்லவா..!
விடுகதைகள்
1. சட்டை போடாதவன் ஆனாலும் சட்டையைக் கழற்றுடுவான்.
2. வாலில் வைத்திருப்பான் வகையான ஆயுதம்.
3. கறுப்பனுக்கு வயதானால் வெள்ளையன்.
4. அம்மா என்றழைத்தவனுக்கு அடுத்த வார்த்தை தெரியாது.
5. இனிக்கும் கைத்தடி ஓங்கினால் தடியடி.
இதன் விடை நாளைய பக்கத்தில். அதற்கிடையில் குட்டீஸ்களிடம் புதிர் போட்டு விடை தெரியாமல் நீங்கள் மாட்டிக் கொண்டால் நாங்கள் பொருப்பல்ல., ஹி..ஹி..!
Thursday, October 12, 2006
ஓ…அப்படியா..!
ஆண்களின் குரல்வளை பெண்களின் குரல்வளையை விடப் பெரியது. இதுவே ஆண்களின் குரல் கனமாக, கடினமானதாக இருப்பதற்குரிய காரணமாகும்.
அசைவிற்கு ஏற்ப தொண்டையில் உள்ள அதிர்வு நாளங்கள் சுருங்கி விரிந்து செயல்படும் போது துருத்திக் கொண்டுள்ள குருத்தெலும்பானது இனிமையான, கடினமான குரலுக்கு காரணமாய் இருக்கிறது.
இந்த குருத்தெலும்பை ஆண்களின் கழுத்துப் பகுதியில் காணலாம். அதன் பெயர் ‘ஆடம்ஸ் ஆப்பிள்’ எனக் கூறுவார்கள்.
அசைவிற்கு ஏற்ப தொண்டையில் உள்ள அதிர்வு நாளங்கள் சுருங்கி விரிந்து செயல்படும் போது துருத்திக் கொண்டுள்ள குருத்தெலும்பானது இனிமையான, கடினமான குரலுக்கு காரணமாய் இருக்கிறது.
இந்த குருத்தெலும்பை ஆண்களின் கழுத்துப் பகுதியில் காணலாம். அதன் பெயர் ‘ஆடம்ஸ் ஆப்பிள்’ எனக் கூறுவார்கள்.
Tuesday, October 10, 2006
படித்ததில் ரசித்தது..!
Friday, September 29, 2006
கண்ணதாசன் vs இறைவன்
“பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
‘பிறந்து பார்’ என இறைவன் பணித்தான்.
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
‘இறந்து பார்’ என இறைவன் சொன்னான்.
‘மனையாள் சுகம் யாதெனக் கேட்டேன்.
‘மணந்து பார்’ என இறைவன் பணித்தான்.
‘அனுபவித்தே அறிவது வாழ்வெனின்
இறைவா நீ ஏன்? என்றேன்.
இறைவன் சற்றே அருகில் வந்து
“அனுபவம் என்பதே நான் தான்” என்றான்.
கண்ணதாசனின் கவிதை வரிகள்....
‘பிறந்து பார்’ என இறைவன் பணித்தான்.
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்.
‘இறந்து பார்’ என இறைவன் சொன்னான்.
‘மனையாள் சுகம் யாதெனக் கேட்டேன்.
‘மணந்து பார்’ என இறைவன் பணித்தான்.
‘அனுபவித்தே அறிவது வாழ்வெனின்
இறைவா நீ ஏன்? என்றேன்.
இறைவன் சற்றே அருகில் வந்து
“அனுபவம் என்பதே நான் தான்” என்றான்.
கண்ணதாசனின் கவிதை வரிகள்....
Wednesday, September 27, 2006
அறிந்துக் கொள்வோமே..!

விலங்குகளில் விசித்திரமானது கங்காரு. அதற்கு நடக்கத் தெரியும், தாவத் தெரியும். ஓடத் தெரியாது. நீளம் தாண்டுதவதில் மனிதனின் சாதனையை வென்று விடும். 30 அடிகள் தாவும். ஆதன் நீண்ட தடித்த வால், தாவுதற்கேற்ற முறையில் அமைந்தது.
பிறக்கும் போது ஓர் அங்குல அளவில் இருக்கும் குட்டியை வயிற்றுப் பையில் வைத்துக் காப்பாற்றும். அக்குட்டி ஐந்து மாதங்களில் ஒன்றே முக்கால் அடியாக வளர்ந்து விடும். ஆறடி அம்மாவுக்கு ஓரங்குல குழந்தை என்னும் புதிருக்கு இதுவே விடையாகும்.
குட்டியோ எட்டாம் மாதத்தில் பையிலிருந்து வெளியே வந்து இரை தேடும். தன்னைப் பிடிக்க வரும் வேட்டை நாய்களைப் பின்னங்கால்களால் உதைத்துச் சிதைத்து விடும்.
(மிக்க மேலானவன்)
Monday, September 25, 2006
பிளாக் பாக்சின் நிறம்..
Friday, September 22, 2006
தூக்கமே முக்கியம்...
உலக அரங்கத்தில் ஆங்கிலப் பேரிலக்கியத்திற்காக 1914- காலக் கட்டத்தில் பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா நோபல் பரிசைப் பெற்றிருந்தார். அச்செய்தி அவருக்கு அன்று நள்ளிரவில் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டபோது, அவர் இவ்வாறு கூறினார்:
‘நான் இந்தப் பரிசைப் பெற்றிருக்கக் கூடிய ஒரு சாதாரண விஷயத்திற்காக என்னுடைய அருமையான உறக்கம் கெடுக்கப்பட்டிருக்க வேண்டாமே!’
ஓ…
உண்மை தான்! அதைத் இத்தருணத்திலும் வெளிப்படுத்திய ஷா உண்மையாகவே விந்தையான மனிதர் தான்!
சுவையான மனிதர்கள்
சுவையான சம்பவங்கள
‘நான் இந்தப் பரிசைப் பெற்றிருக்கக் கூடிய ஒரு சாதாரண விஷயத்திற்காக என்னுடைய அருமையான உறக்கம் கெடுக்கப்பட்டிருக்க வேண்டாமே!’
ஓ…
உண்மை தான்! அதைத் இத்தருணத்திலும் வெளிப்படுத்திய ஷா உண்மையாகவே விந்தையான மனிதர் தான்!
சுவையான மனிதர்கள்
சுவையான சம்பவங்கள
சுவையான சம்பவங்கள்...
பாரத தேசத்தின் விடுதலை வேள்வியில் தீவிர பங்கேற்றவர்களில் குறிப்பிடத்தக்கவராகச் செயலாற்றிய ‘லோகமான்ய பாலகங்காதர திலகரின்’ நடவடிக்கைகளை உளவு அறிவதற்கெனப் பிரிட்டிஷ் அரசாங்கம் ரகசியப் போலீஸ்காரர் ஒருவரை அனுப்பித் திலகர் வீட்டுச் சமையல்காரராக அமர்ந்து அவரைக் கண்காணித்து வரும்படி ஆணையிட்டது.
அந்த ரகசியப் போலீஸ்காரரும் அவ்வாறே திலகர் வீட்டிலே சமையற்காரராக அமர்ந்தார்.
ஆறு மாதங்கள் ஓடி விட்டன. ஒரு நாள்..,
அந்த சமையற்காரர் திலகரிடம், ‘எஜமான், எனக்குச் சம்பளம் போதவில்லை. கொஞ்சம் உயர்த்திக் கொடுங்கள்.’ என்று வேண்டிக் கொண்டார்.
திலகர் அர்த்தச் செரிவுடனே சிரித்தார். ‘என்னப்பா, இப்படிக் குறைப்பட்டுக் கொள்கிறாயே? நான் உனக்கு மாதம் ஆறு ரூபாய் சம்பளம் தருகிறேன். பிரிட்டிஷ் அரசாங்கமோ உனக்கு மாதா மாதம் இருபத்திநாலு ரூபாய் சம்பளம் தருகிறது, என்னைக் கவனித்துக் கொள்வதற்கு! இன்னுமா உனக்குத் திருப்தி ஏற்படவில்லை?’ என்றார்.
அவ்வளவு தான்!
துப்பறியும் போலீஸாருக்கு வியர்த்துக் கொட்டியது, தலை குனிந்தார். அன்றிரவு வெளியே போய் விட்டுத் திரும்புவதாகச் சொல்லிவிட்டுப் போன அந்த சமையற்காரர் அப்புறம் திரும்பி வரவே இல்லை!
அந்த ரகசியப் போலீஸ்காரரும் அவ்வாறே திலகர் வீட்டிலே சமையற்காரராக அமர்ந்தார்.
ஆறு மாதங்கள் ஓடி விட்டன. ஒரு நாள்..,
அந்த சமையற்காரர் திலகரிடம், ‘எஜமான், எனக்குச் சம்பளம் போதவில்லை. கொஞ்சம் உயர்த்திக் கொடுங்கள்.’ என்று வேண்டிக் கொண்டார்.
திலகர் அர்த்தச் செரிவுடனே சிரித்தார். ‘என்னப்பா, இப்படிக் குறைப்பட்டுக் கொள்கிறாயே? நான் உனக்கு மாதம் ஆறு ரூபாய் சம்பளம் தருகிறேன். பிரிட்டிஷ் அரசாங்கமோ உனக்கு மாதா மாதம் இருபத்திநாலு ரூபாய் சம்பளம் தருகிறது, என்னைக் கவனித்துக் கொள்வதற்கு! இன்னுமா உனக்குத் திருப்தி ஏற்படவில்லை?’ என்றார்.
அவ்வளவு தான்!
துப்பறியும் போலீஸாருக்கு வியர்த்துக் கொட்டியது, தலை குனிந்தார். அன்றிரவு வெளியே போய் விட்டுத் திரும்புவதாகச் சொல்லிவிட்டுப் போன அந்த சமையற்காரர் அப்புறம் திரும்பி வரவே இல்லை!
அரை மீசை...
Wednesday, September 20, 2006
குழப்பம்...
என்ன தொழில் தொடங்குவது அல்லது எவ்வாறு நம் எதிர்காலத்தை திட்டமிடுவது என்று என்னுள் ஓரு சில மாதங்கள் குழப்பமாகவே இருக்கிறது நாம் இவ்வாறு குழம்பிக் கொண்டே இருப்பது சரிதான? என்று என்னிய போது பா நந்தன் அவர்கள் எழுதிய குழப்பம்... எனும் இக் கவிதை என் கண்ணில் பட்டது அவற்றில் சில வரிகள் இங்கே
படித்து முடித்தவுடன் என்னுள் ஓர் தெளிவு நன்றி பா நந்தன் அவர்களே...
கவிதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
குழப்பமில்லாமல்
தத்துவங்களும் விஞ்ஞானமும் இல்லை.
ஆப்பிள் ஏன் கீழே விழுந்ததென்று குழம்பாவிடில்
புவிஈர்ப்பின் அவசியம் தெரிந்திருக்காது.
பறவைகள் மட்டுமேன் பறக்கின்றனவென்று குழம்பாவிடில்
விமானத்தின் கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்காது.
ஆனால் இன்று நீங்கள்
குழம்புவதை நிறுத்தி விட்டீர்கள்.
தெளிவு என்னும் அறியாமையில்
மூழ்கி விட்டீர்கள்.
எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டீர்கள்.
அல்லது கண்மூடித்தன்மாய் எதிர்க்கத் தொடங்கி விட்டீர்கள்.
அதனால் குட்டையைப்போல்
ஒரே இடத்தில் தேங்க ஆரம்பித்து விட்டீர்கள்.
ஆதலால் எல்லோரும் குழம்பிக் கொண்டே இருங்கள்.
நதி போல் என்றும் பயணித்துக் கொண்டே இருங்கள்."
படித்து முடித்தவுடன் என்னுள் ஓர் தெளிவு நன்றி பா நந்தன் அவர்களே...
கவிதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்
Tuesday, September 19, 2006
ஹா ஹா!
புகழ் மிக்க ஆங்கிலக் கவி காலரிட்ஜிடம் ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் லாம்ப் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அடிக்கடி அவரோடு பேசிப்பழக ஆரம்பித்தார்.
ஒரு நாள்:
முன்னர் தாம் செய்த பிரசங்கங்களைச் சார்லஸ் லாம்பிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார் காலரிட்ஜ். “சார்லஸ்! நான் பிரசங்கம் செய்து நீங்கள் கேட்டதில்லை தானே?” என்று வினவினார்.
சார்லஸ் லாம்ப் சொன்னார்: “உங்களிடம் நான் பிரசங்கத்தைத் தவிர வேறெதையுமே இது வரையிலும் கேட்டதில்லையே” என்றார்.
ஒரு நாள்:
முன்னர் தாம் செய்த பிரசங்கங்களைச் சார்லஸ் லாம்பிடம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார் காலரிட்ஜ். “சார்லஸ்! நான் பிரசங்கம் செய்து நீங்கள் கேட்டதில்லை தானே?” என்று வினவினார்.
சார்லஸ் லாம்ப் சொன்னார்: “உங்களிடம் நான் பிரசங்கத்தைத் தவிர வேறெதையுமே இது வரையிலும் கேட்டதில்லையே” என்றார்.
Sunday, September 17, 2006
அட அப்படியா?! பகுதி 2
மீன்களும் அதன் பயன்களும்.
பால் சுறா - நோய்களுக்கும், ஈன்ற தாய்மார்களுக்கும் பயன்மிக்கது.
நட்சத்திர மீன் - சோர்வுற்ற தசைகளைத் தூண்டக்கூடிய மருந்துப்பொருட்கள் இம்மீனிலிருந்து பெறப்படுகிறது.
திருக்கை மீன் - இம்மீனின் வாலிலுள்ள கொடுக்குப் போன்ற முள்ளின் விடம், இருதய அறுவை சிகிச்சைக்கு பயன்படுகிறது.
தேரை மீன் - இதன் உடலிலிருந்து உண்டாகும் ரசாயனப் பொருள் இரத்தத்திலுள்ள சர்க்கரையை அழித்து விடுகிறதாம்.
கடல் வெள்ளரி மீன் - புற்று நோய்க்கு மருந்து.
சிப்பிலி - இதனிலிருந்து வெளிப்படும் பொருள் இளம்பிள்ளை வாதம், இன்புளுவென்சாவுக்கு, மருந்தாகவும், இரத்தம் உறைவதைத் தடுப்பதற்கு அறுவை சிகிச்சைக்கு தேவையான ஆற்றலை அளிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆக்டபஸ் - இதன் உமிழ்நீர் விடமாக இருப்பினும், அதனால் இருதய நோயை குணப்படுத்த முடிகிறதாம்.
கடல் நத்தை – நோயை எதிர்க்ககூடிய ஆன்டிபயாடிக் தயாரிக்கப்படுகிறது.
கடல் முள்ளெலி - இதிலிருந்து எடுக்கப்படும் விடம் புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றலுடையதாம்.
காட் மீன் - ஏ, டி, இ வைட்டமின்கள் கிடைக்கின்றன.
டிரங்க் மீன் - கைகால் வலிப்பு, நரம்பு தொடர்பான நோய்களுக்கு மருந்து கிடைக்கிறது.
டூனி மீன் - நீரிழிவு நோயைப் போக்குதற்குறிய இன்சுலின் பெறப்படுகிறது.
கடல் விசிறி - இப்பிராணியிலிருந்து எடுக்கப்படும் மருந்துப் பொருள், குடல் புண்களைக் குணமாக்கவும் இயங்கு தசையை முடுக்கிவிடவும், ஆஸ்துமா இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
(மிக்க மேலானவன்)
பால் சுறா - நோய்களுக்கும், ஈன்ற தாய்மார்களுக்கும் பயன்மிக்கது.
நட்சத்திர மீன் - சோர்வுற்ற தசைகளைத் தூண்டக்கூடிய மருந்துப்பொருட்கள் இம்மீனிலிருந்து பெறப்படுகிறது.
திருக்கை மீன் - இம்மீனின் வாலிலுள்ள கொடுக்குப் போன்ற முள்ளின் விடம், இருதய அறுவை சிகிச்சைக்கு பயன்படுகிறது.
தேரை மீன் - இதன் உடலிலிருந்து உண்டாகும் ரசாயனப் பொருள் இரத்தத்திலுள்ள சர்க்கரையை அழித்து விடுகிறதாம்.
கடல் வெள்ளரி மீன் - புற்று நோய்க்கு மருந்து.
சிப்பிலி - இதனிலிருந்து வெளிப்படும் பொருள் இளம்பிள்ளை வாதம், இன்புளுவென்சாவுக்கு, மருந்தாகவும், இரத்தம் உறைவதைத் தடுப்பதற்கு அறுவை சிகிச்சைக்கு தேவையான ஆற்றலை அளிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆக்டபஸ் - இதன் உமிழ்நீர் விடமாக இருப்பினும், அதனால் இருதய நோயை குணப்படுத்த முடிகிறதாம்.
கடல் நத்தை – நோயை எதிர்க்ககூடிய ஆன்டிபயாடிக் தயாரிக்கப்படுகிறது.
கடல் முள்ளெலி - இதிலிருந்து எடுக்கப்படும் விடம் புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றலுடையதாம்.
காட் மீன் - ஏ, டி, இ வைட்டமின்கள் கிடைக்கின்றன.
டிரங்க் மீன் - கைகால் வலிப்பு, நரம்பு தொடர்பான நோய்களுக்கு மருந்து கிடைக்கிறது.
டூனி மீன் - நீரிழிவு நோயைப் போக்குதற்குறிய இன்சுலின் பெறப்படுகிறது.
கடல் விசிறி - இப்பிராணியிலிருந்து எடுக்கப்படும் மருந்துப் பொருள், குடல் புண்களைக் குணமாக்கவும் இயங்கு தசையை முடுக்கிவிடவும், ஆஸ்துமா இரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
(மிக்க மேலானவன்)
Friday, September 15, 2006
அட அப்படியா?!
நீரில் வாழும் மீனினத்தில் இருபதினாயிரம் வகைகளை இறைவன் படைத்துள்ளான்.
அவை சுவை மிகுந்த உணவாகவும் பிணிகளைப் போக்கும் மருந்தாகவும் உதவுகின்றன.
பாக்டீரியாக்களையும் வைரஸ் கிருமிகளையும் அழிக்கும் 125 ரசாயனப் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களிலிருந்து மனித குலத்திற்குக் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். புரதம், கொழுப்பு, வைட்டமின் ஏ, டி, கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாசுபரஸ், பொட்டாசியம், குளோரின் ஆகிய சத்துக்கள் மீன்களிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன.
ஒவ்வொரு மீனின் பயனையும் நாளை விரிவாகக் காண்போமே..!
அவை சுவை மிகுந்த உணவாகவும் பிணிகளைப் போக்கும் மருந்தாகவும் உதவுகின்றன.
பாக்டீரியாக்களையும் வைரஸ் கிருமிகளையும் அழிக்கும் 125 ரசாயனப் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களிலிருந்து மனித குலத்திற்குக் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். புரதம், கொழுப்பு, வைட்டமின் ஏ, டி, கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாசுபரஸ், பொட்டாசியம், குளோரின் ஆகிய சத்துக்கள் மீன்களிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன.
ஒவ்வொரு மீனின் பயனையும் நாளை விரிவாகக் காண்போமே..!
Friday, September 08, 2006
ஹா ஹா..!
ஒரு சமயம் ஆங்கில இலக்கியத்தின் மாமேதையான ஜார்ஜ் பெர்னார்ட்ஷாவைத் திரையுலக நட்சத்திரம் ஒருத்தி சந்தித்தாள்
‘தாங்கள் என்னைத் திருமணம் செய்துக் கொண்டால், என்னைப் போல அழகும் உங்களைப் போன்ற அறிவும் கொண்ட பிள்ளைப் பிறக்கும் அல்லவா?’ என்றாள்.
ஷா சொன்ன பதில் இது:
‘உண்மையில் அப்படிப் பிறக்கிற குழந்தை உன் மாதிரி அறிவோடும் என் மாதிரி அழகோடும் இருந்து விட்டால், என்ன செய்வதாம்?’
சந்திக்க வந்த நடிகை சிந்தனையுடன் மௌனமாக வெளியேறினாள்.
சுவையான மனிதர்கள்
சுவையான சம்பவங்கள்
‘தாங்கள் என்னைத் திருமணம் செய்துக் கொண்டால், என்னைப் போல அழகும் உங்களைப் போன்ற அறிவும் கொண்ட பிள்ளைப் பிறக்கும் அல்லவா?’ என்றாள்.
ஷா சொன்ன பதில் இது:
‘உண்மையில் அப்படிப் பிறக்கிற குழந்தை உன் மாதிரி அறிவோடும் என் மாதிரி அழகோடும் இருந்து விட்டால், என்ன செய்வதாம்?’
சந்திக்க வந்த நடிகை சிந்தனையுடன் மௌனமாக வெளியேறினாள்.
சுவையான மனிதர்கள்
சுவையான சம்பவங்கள்
Subscribe to:
Posts (Atom)


